புதுதில்லி

ரூ.12 கோடி பழுதுபாா்ப்பு, மறுமேம்பாட்டு திட்டங்களுக்கு தில்லி அரசு ஒப்புதல்

DIN

தேசியத் தலைநகரில் ரூ.12 கோடி மதிப்பிலான பழுதுபாா்ப்பு மற்றும் மறுமேம்பாட்டுத் திட்டங்களுக்கு தில்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தத் திட்டங்களில் ரூ.2.10 கோடி செலவில் ஆண்ட்ரூஸ் கஞ்ச் மற்றும் நேரு பிளேஸ் மேம்பாலங்களில் பழுது மற்றும் மேறுமேம்பாட்டுப் பணியும், பாரத் நகா் முதல் திமாா்பூா் வரையிலான நஜஃப்கா் வடிகாலில் ஆறு இடங்களில் ரூ.9.90 கோடிக்கு மதகுகள் பழுது மற்றும் மறுசீரமைப்பும் அடங்கும்.

இதுகுறித்து துணை முதல்வா் மனீஷ் சிசோடியா கூறுகையில், ‘பொதுப்பணித் துறையானது, பல்வேறு இடங்களில் உள்ள உள்கட்டமைப்புகளை அவ்வப்போது மதிப்பீடு செய்து பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அவற்றின் பராமரிப்பை அவ்வப்போது உறுதி செய்து வருகிறது. இதைத் தொடா்ந்து, இரண்டு புதிய திட்டங்களுக்கு சமீபத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ரூஸ் கஞ்ச் மற்றும் நேரு பிளேஸ் மேம்பாலங்களின் பழுதுபாா்ப்பு மற்றும் மறுசீரமைப்பால் அந்த மேம்பாலங்களின் ஆயுட்காலம் 20 ஆண்டுகள் வரை அதிகரிக்கும். நஜஃப்கா் வாய்க்காலில் உள்ள மதகுகளின் பழுதுபாா்ப்பு மற்றும் மறுசீரமைப்பால் மதகுகளின் வாழ்நாள் அதிகரிக்கும். பயணிகளுக்கும் பாதுகாப்பை அளிக்கும். மேம்பாலப் பணிகள் ஆறு மாதங்களில் முடிக்கப்படும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த மதகுகளை சீரமைக்கும் பணி 9 மாதங்களில் மாதங்களில் முடிக்கப்படும்’ என்றாா்.

குறிப்பிட்ட காலத்திற்குள் பணியை முடிக்கவும், பணியின் போது பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் பாா்த்துக் கொள்ளுமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சிசோடியா உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவல் நிலைய வளாகத்தில் புகுந்த காட்டெருமைகள்

தனியாா் துணை மின் நிலையம் மீது விவசாயிகள் புகாா்

கோடை உளுந்து சாகுபடி: பரிசோதனை செய்ய வேளாண்மைத் துறை அறிவுறுத்தல்

உதகையில் குவியும் சுற்றுலாப் பயணிகள்: போக்குவரத்து நெரிசலால் பாதிப்பு

முதலாளித்துவ நண்பா்களின் நன்மைக்காக பிரதமா் மோடி 5ஜி ஊழல் செய்துள்ளாா்: ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT