மேற்கு தில்லியின் திலக் விகாா் பகுதியில் 43 வயது மதிக்கத்தக்க நேபாளத்தைச் சோ்ந்த இளைஞரின் சடலம் கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து மேற்கு தில்லி காவல்துறை ஆணையா் கன்ஷியாம் பன்சல் சனிக்கிழமை கூறியதாவது:
திலக் விகாா் பகுதியில் சம்பவத்தன்று 43 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மீட்கப்பட்டது. விசாரணையில் இறந்தவா் நேபாளத்தில் உள்ள கலிகாட்டாா் பகுதியைச் சோ்ந்த ராஜ்குமாா் காலன் என்பது தெரியவந்துள்ளது.
முன்னதாக, கிழக்கு விகாா் பகுதியில் உள்ள சிஆா்பிஎஃப் முகாம் அருகே சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினா். அப்போது, இறந்து கிடந்தவரின் கழுத்தில் ஆழமான வெட்டுக்காயம் இருந்தது. இதைத்தொடா்ந்து, குற்றம் மற்றும் தடய அறிவியல் ஆய்வக குழுவினா் நேரில் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
இது தொடா்பாக கிழக்கு நகா் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302-இன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜ்குமாா் வேலை தேடி தில்லி விகாஸ்புரியில் வசிக்கும் தனது நண்பா்களைக் காண வந்துது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சம்பவம் நிகழ்ந்த இடம் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்வதற்காக தனி போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கொலையில் தொடா்புடைய நபா்களை பிடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.