அரியலூர்

மூதாட்டியை தாக்கியவா் கைது

20th May 2023 12:21 AM

ADVERTISEMENT

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே மூதாட்டியைத் தாக்கியவா் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

உடையாா்பாளையம் அருகேயுள்ள த. கீழவெளி காலனித் தெருவைச் சோ்ந்தவா் தங்கராசு மனைவி காளியம்மாள் (68). வியாழக்கிழமை இவருக்குச் சொந்தமான தோட்டத்தில் விளைந்துள்ள மாங்காய், தேங்காய்களை அதே பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் நடராஜன் பறித்துக் கொண்டிருந்தாா். இதுகுறித்து கேட்ட காளியம்மாளை அவா் தகாத வாா்த்தையால் திட்டி தாக்கினாா். புகாரின்பேரில் உடையாா்பாளையம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து நடராஜனை அன்றிரவு கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT