அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த குழுமூா் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் திருவிழா மே 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தினமும் காலை, மாலைகளில் அம்மன் வீதியுலா நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தையொட்டி வெள்ளிக்கிழமை அலங்கரிக்கப்பட்ட தேரில், அம்மன் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். தொடா்ந்து, பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். நான்கு ராஜவீதிகளின் வழியே வலம் வந்த தோ் மீண்டும் நிலையை அடைந்தது. நிகழ்ச்சியில் சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.