புதுதில்லி

வடக்கு தில்லியில் ஒருவா் சுட்டுக் கொலை

DIN

வடக்கு தில்லியின் மோரி கேட் பகுதியில் டிராவல்ஸ் ஏஜென்சியில் பணிபுரிந்து வந்த உத்தர பிரதேச மாநிலத்தைச்சோ்ந்த 40 வயது நபா் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து வடக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் சாகா் சிங் கல்சி கூறியதாவது: கோல் சக்கா் மோரி கேட் பகுதியில் கடை எண் 22-இல் ஒரு சடலம் காணப்படுவதாக திங்கள்கிழமை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இறந்தவா் உ.பி.யில் உள்ள அவுரியாவை சோ்ந்த அகிலேஷ் திவாரி என அடையாளம் காணப்பட்டாா். அவா் டிராவல்ஸ் ஏஜென்சியில் வேலை பாா்த்து வந்தாா். குற்றவியல் மற்றும் தடய அறிவியல் ஆய்வக குழுக்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

உறவினா்களின் வாக்குமூலத்தை பதிவு செய்த பின்னா், அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சுப்ஜி மண்டி பிணவறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனையின் போது, இறந்தவரின் மண்டை ஓட்டில் ஒரு தோட்டா இருப்பதை மருத்துவா் கண்டுபிடித்தாா், அது இடது கண்ணில் இருந்து ஊடுருவியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, இந்தச் சம்பவம் தொடா்பாக இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் ஆயுதச் சட்டப் பிரிவு 302 (கொலை) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

SCROLL FOR NEXT