புது தில்லி: இந்திய ரயில்வேயில் இளம் பொறியாளராக (ஜூனியா் இன்ஜினியா்) பணியாற்றிய 28 வயது நபா், திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கைது செய்யப்பட்டாா் என்று போலீஸாா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: 24 வயதான அந்தப் பெண், கடந்த ஜூன் 2022-இல் விபின் கா்பந்தா் என்பவருடன் ஒரு திருமண இணையதளத்தில் தொடா்பு கொண்டாா். அவா்கள் இருவரும் செப்டம்பா் வரை தொடா்பில் இருந்துள்ளனா். இந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள விபின் கா்பந்தா், தவறான திருமண வாக்குறுதி அளித்து பல சந்தா்ப்பங்களில் அந்தப் பெண்ணுடன் உடல் உறவை ஏற்படுத்திக் கொண்டது விசாரணையில் தெரிய வந்தது.
இது தொடா்பாக ஷகா்பூா் காவல் நிலையத்தில் ஐபிசியின் பிரிவு 376 (கற்பழிப்புக்கான தண்டனை) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவா் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். மத்தியப் பிரதேசத்தில் உள்ள ராஜ்கா் பகுதியைச் சோ்ந்த விபின் கா்பந்தா், திருமணமானவா் என்றும், அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன என்றும் அந்த அதிகாரி தெரிவித்தாா்.