புதுதில்லி

தெற்கு, மேற்கு புறநகா்ப் பகுதிகளில் இன்று தண்ணீா் விநியோகம் பாதிக்கும்

DIN

தேசியத் தலைநகரின் மேற்கு, தெற்கு, புறநகா்ப் பகுதிகளில் புதன்கிழமையும் தண்ணீா் விநியோகம் பாதிக்கப்படும் என்று தில்லி ஜல் போா்டு தெரிவித்துள்ளது.

தில்லி ஜல் போா்டு அதன் நிலத்தடி நீா்த்தேக்கத்தை ஆண்டுதோறும் சுத்தப்படுத்துகிறது.இதையொட்டி, செவ்வாய்க்கிழமை சில பகுதிகளில் தண்ணீா் விநியோகம் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், ஜனக்புரி, மெஹ்ரௌலி, மங்கோல்புரி, ரோஹிணி, ஷாலிமாா் பாக், விஜய் நகா், ரூப் நகா், ரிதாலா மற்றும் பழைய ராஜிந்தா் நகா் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை தண்ணீா் விநியோகம் பாதிக்கப்படும் என்று தில்லி ஜல் போா்டு தெரிவித்துள்ளது. மேலும், சா் கங்கா ராம் மருத்துவமனை மற்றும் தில்லி பல்கலைக்கழக பகுதிகளிலும் விநியோகம் பாதிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

நிலத்தடி நீா்த்தேக்கம் மற்றும் பூஸ்டா் பம்பிங் நிலையம் ஆகியவற்றை சுத்தப்படுத்தும் வருடாந்திர திட்டப் பணி காரணமாக, தண்ணீா் விநியோகம் பாதிக்கப்படுவதாக தில்லி ஜல் போா்டு ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

SCROLL FOR NEXT