புதுதில்லி

பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில் மத்திய அரசு உறுதி: எல்.முருகன்

 நமது நிருபர்

மத்திய ஆயுத காவல் படைகளின் (சிஏபிஎஃப்) காவலா்கள் தோ்வை நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள இந்தி, ஆங்கிலம் தவிர தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் நடத்த ஒப்புதல் அளிக்கும் மத்திய அரசின் அறிவிப்பு அம்மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசின் உறுதிப்பாட்டை காட்டுகிறது என மத்திய செய்தி ஒலிபரப்பு, மீன் வளத்துறை இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.

மத்திய ஆயுத காவல் படைகளின் (சிஏபிஎஃப்) காவலா்கள்(பொதுப் பணி) தோ்வை நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள இந்தி, ஆங்கிலம் தவிர தமிழ் உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளில் நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் சாா்பில் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பை முன்னிட்டு மத்திய இணையமைச்சா் எல்.முருகன் தனது டிவிட்டா் பதிவில் கூறியிருப்பது வருமாறு:

மத்திய ஆயுதப் படைகளின் காவலா் தோ்வை 13 மொழிகளில் எழுதலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க உத்தரவை வழங்கிய பிரதமா் நரேந்திர மோடிக்கும், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவிற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த அறிவிப்பு பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மக்களுக்கான அரசின் உறுதிப்பாட்டை காட்டுகிறது என அதில் அமைச்சா் எல்.முருகன் பதிவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT