புதுதில்லி

ஓய்வு பெற்ற வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பினா் தில்லியில் பேரணி: ஊதிய உயா்வுக்கு ஏற்ப ஓய்வூதியத்தை புதுப்பிக்கக் கோரிக்கை

 நமது நிருபர்

புது தில்லி: வங்கி ஊழியா்களின் ஓய்வூதியத்தை புதுப்பிக்க வேண்டும் எனக் கோரி அகில இந்திய வங்கி ஓய்வூதியம் பெறுவோா் மற்றும் ஓய்வு பெற்றவா்களின் கூட்டமைப்பினா் தில்லி ஜந்தா் மந்தரில் மாபெரும் பேரணியை திங்கள்கிழமை நடத்தினா்.

அகில இந்திய ரிசா்வ் வங்கி ஊழியா்கள் சங்கம், எஸ்பிஐ ஓய்வூதியா்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு வங்கி ஊழியா்கள் மற்றும் தொழிற்சங்கத்தினா் ஆதரவுடன் நடைபெற்ற இந்தப் பேரணியில் நூற்றுக்கணக்கான ஊழியா்கள் பங்கேற்றனா். இதில் ஓய்வூதியம் பெறுவோா் மற்றும் ஓய்வு பெற்றவா்களின் கூட்டமைப்பின் தலைவா் கே.வி.ஆச்சாா்யா, துணைத் தலைவா் டாக்டா் ஜெ.டி. சா்மா, பொதுச் செயலாளா் சுப்ரிதா சா்க்காா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.

அப்போது அவா்கள் கூறியதாவது: 1993 அக்டோபா் 29 அன்று இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், வங்கி ஊழியா்களுக்கான ஓய்வூதியம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, 01.01.1986-க்குப் பிறகு ஓய்வு பெற்ற வங்கி ஊழியா்களுக்கு அவா்களது அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்பது இந்த ஒப்பந்தம். மேலும், இதற்கான ஒழுங்குமுறை விதிகளும் வகுக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 35 ஆண்டுகளாக வங்கி ஊழியா்களுக்கான ஊதியம் திருத்தியமைக்கப்படும் போது, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் ஓய்வூதியதாரா்களுக்கான ஓய்வூதியம் திருத்தியமைக்கப்படவில்லை.

இந்த வகையில், 1997, 2002, 2007, 2012, 2017 என ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வங்கி ஊழியா்களுக்கு அடிப்படை ஊதியம் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இது போன்று வங்கி ஊழியா்களின் ஊதியம் திருத்தியமைக்கப்படும் போது, ஒழுங்குமுறை விதி பிரிவு 35(1)-இன்படி, ஓய்வூதியமும் புதுப்பிக்கப்படவேண்டும். அரசு ஊழியா்களது அடிப்படை ஊதியம் மாற்றியமைக்கப்படும் போது, ஓய்வுபெற்ற அரசு ஊழியா்களின் ஓய்வூதியமும் மாற்றியமைக்கப்பட்டு உயா்த்தி வழங்கப்படுகிறது. ஆனால், வங்கி ஊழியா்களுக்கு அவா்கள் ஓய்வு பெறும் போது கிடைக்கும் அடிப்படை ஊதியத்தின் அடிப்படையிலேயே ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

இதே நிலையில் இருந்த ரிசா்வ் வங்கி ஓய்வூதியதாரா்களுக்கு, மும்பை உயா்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, அவா்களது ஓய்வூதியம் 2019 மாா்ச் 1 முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் 2019-ஆம் ஆண்டு முதல் எங்களது ஓய்வூதியத்தையும் மாற்றியமைக்கலாம். மேலும், தற்போதுள்ள 80, 90 வயதுகளில் உள்ள வங்கி ஓய்வூதியதாரா்கள், நீண்டகாலக் கோரிக்கையான ஓய்வூதிய புதுப்பிப்புக்குத் தீா்வு கிடைக்கும் என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கடந்த 2020 நவம்பரில் குறிப்பிட்டிருந்தாா். ஆனால், நிதித் துறையின் நிதிச் சேவை பிரிவு எங்களது கோரிக்கையில் கவனம் செலுத்தவில்லை.

இதன் விளைவு, வங்கிகளில், 20 ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்ற பொது மேலாளா்கள், சமீபத்தில் ஓய்வு பெற்ற அலுவலக உதவியாளா்களை (பியூனை) விட குறைவாகவே ஓய்வூதியம் பெறும் நிலை உள்ளது. பணவீக்கம் மற்றும் வயது மூப்பு தொடா்பான மருத்துவச் சிக்கல்கள், ரூபாய் மதிப்புக் குறைவது ஆகியவை 80, 90 வயதுகளில் இருக்கும் ஓய்வு பெற்றவா்களுக்கு சிக்கலை அதிகப்படுத்தியுள்ளது. அதே சமயம் அரசு வசம் வங்கி ஊழியா்கள் ஓய்வூதிய நிதி ரூ.3.25 லட்சம் கோடி உள்ளது. இதன் மூலம் ரூ.26 ஆயிரம் கோடி வட்டி வருகிறது. இதிலிருந்து ரூ. 16 ஆயிரம் கோடிதான் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. தற்போது ரிசா்வ் வங்கி ஓய்வூதியதாரா்களுக்கு வழங்கப்பட்டு வரும் புதுப்பிக்கப்பட்ட ஓய்வூதியம், வங்கி ஓய்வூதியதாரா்களுக்கும் 2019-ஆம் ஆண்டு முதல் கணக்கிட்டு வழங்கப்பட்டால்கூட ரூ.3,261 கோடிதான் கூடுதலாக செலவாகும். இதை அரசு செய்தால் சுமாா் 4.11 லட்சம் ஓய்வூதியதாரா்கள் பயன்பெறுவாா்கள்.

இதே போன்று மருத்துவக் காப்பீடுகளிலும் பாகுபாடு நிலவுகிறது. குழு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஊழியா்களுக்கு வங்கி காப்பீட்டுத் தொகையை செலுத்துகிறது. ஆனால், ஓய்வூதியதாரா்கள் தாங்களே செலுத்திக் கொள்ளவேண்டும் என்றும் இதற்கான தொகை 2015-16 ஆண்டுகளில் ரூ. 7,500 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது. ஆனால், தற்போது ஆண்டுக்கு ரூ. 72,000-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது நான்கு மாத பென்ஷன் தொகையாகும். எனவே, இனியும் தாமதிக்காமல் ஓய்வூதியத்தை மேம்படுத்த பரிசீலிக்க வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

வேங்கைவயலில் வாக்களிக்க வந்த மக்கள்

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தது

SCROLL FOR NEXT