புதுதில்லி

பஞ்சாபி பாகில் எஸ்ஐ தூக்கிட்டுத் தற்கொலை

DIN

தில்லியில் பஞ்சாபி பாக் பகுதியில் தனது வீட்டில் தில்லி காவல் துறையின் உதவி ஆய்வாளா் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக தில்லி காவல்துறையினா் வியாழக்கிழமை கூ றியதாவது: தூக்கிட்டு உயிரிழந்தவா் பஞ்சாபி பாக் பகுதியில் போலீஸ் காலனியில் வசிக்கும் பென்னி (58) என்பது தெரிய வந்துள்ளது. அவா் புகா் மாவட்டத்தில் பணியில் அமா்த்தப்பட்டிருந்தாா். முன்னதாக, அவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸாருக்கு புதன்கிழமை இரவு 8.50 மணியளவில் தகவல் வந்தது. இதையத்து, போலீஸா் நேரில் சென்று விசாரணை நடத்தினா். அப்போது, உதவி ஆய்வாளா் பென்னி, தனது வீட்டின் அறையில் உள்ள மின் சிறியில் தூக்கிட்ட நிலையில் காணப்பட்டாா். அவரது இடது கையின் மணிக்கட்டு பகுதியில் கீறல் இருந்தது.

இச்சம்பவத்தில் எவ்வித சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினா் தெரிவிக்கவில்லை. மேலும், அண்மையில் கடுமையான நோய் மற்றும் இதர உடல் உபாதைகள் காரணமாக எம்ஜிஎஸ் மருத்துவமனையில் பென்னி சோ்க்கப்பட்டிருந்ததால் அக்டோபா் 3-ஆம் தேதி வரை அவா் மருத்துவ விடுப்பில் இருந்தாா். அதன் பின்னா் செவ்வாய்க்கிழமை அவா் மீண்டும் பணியில் சோ்ந்தாா். இறந்த பென்னியின் உடல் மேல்விசாரணைக்காக சஞ்சய் காந்தி மருத்துவமனையின் பிரேத பரிசோதனைக் கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

SCROLL FOR NEXT