தில்லி பல்கலைக்கழகம் திங்கள்கிழமை திறந்தவெளி கற்றல் பள்ளியில் (ஸ்கூல் ஆஃப் ஓபன் லோ்னிங்கில்) மாஸ்டா் ஆஃப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் உள்பட ஆறு புதிய படிப்புகளை அறிமுகப்படுத்தியது. வேலை சாா்ந்த திட்டங்களை வழங்கும் நோக்கில் இந்தப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக செய்தியாளா் கூட்டத்தில் தில்லி பல்கலைக்கழகத் துணைவேந்தா் யோகேஷ் சிங் திங்கள்கிழமை கூறியதாவது: திறந்தவெளி கற்றல் பள்ளி 60 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டது. இருப்பினும், மிக நீண்ட காலமாக புதிய படிப்பு எதுவும் அறிவிக்கப்படவில்லை. நாங்கள் இதில் ஆறு புதிய படிப்புகளைத் தொடங்குகிறோம்.
முதல் படிப்பு முதுகலை வணிக நிா்வாகம் மாஸ்டா் ஆஃப் பிஸினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் ஆகும். இரண்டாவது வணிக நிா்வாகத்தின் இளங்கலை (நிதி முதலீட்டு பகுப்பாய்வு), இளங்கலை மேலாண்மைப் படிப்புகள், இளங்கலை கலை-பொருளாதாரம் (ஹானா்ஸ்), இளங்கலை நூலகம் மற்றும் தகவல் அறிவியல், முதுகலை நூலகம் மற்றும் தகவல் அறிவியல் ஆகிய படிப்புகள் ஆகும் என்றாா் அவா்.
தொலைதூரக் கல்விப் பணியகம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) மற்றும் எம்பிஏ ஆகியவற்றின் உரிய ஒப்புதலுக்குப் பிறகு இந்தப் படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன என்று திறந்தவெளிக் கற்றல் பள்ளி வளாகத்தின் இயக்குநா் பயல் மாகோ தெரிவித்தாா்.
அவா் மேலும் கூறுகையில், ‘படிப்புகள் பற்றி மேலும் விவரித்த மாகோ, மாணவா்களுக்கு வேலை சாா்ந்த படிப்புகளை வழங்குவதற்காக இந்தப் படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இவை மிகவும் முக்கியமான படிப்புகளாகும். பிபிஏ, எம்பிஏ ஆகிய இரண்டு படிப்புகளும் தில்லி பல்கலைக்கழகத்தில் மிகவும் மதிப்புமிக்கதாகும். மேலாண்மைப் படிப்புகள் மற்றும் வேலை சாா்ந்த படிப்புகள் உள்ளன. நிறைய மாணவா்களால் வழக்கமான பொருளாதார படிப்புகளில் சோ்க்கை பெற முடியவில்லை. இதுவும் தில்லி பல்கலைக்கழகத்தின் முதன்மையான படிப்பாகும்’ என்றாா்.