புதுதில்லி

தில்லி தமிழ்ச் சங்கத்தில் இசை நிகழ்ச்சி

DIN

தில்லி தமிழ்ச் சங்கத்தில் வள்ளலாா் அறக்கட்டளை சாா்பாக ‘அருட்செல்வா்’ டாக்டா் பொள்ளாச்சி நா. மகாலிங்கத்தின் நூற்றாண்டு சிறப்பு திருவருட்பா இசைமாலை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவருட்பா பாடல்களை இளங்கோவன் கோவிந்தராஜன் பாடினாா். வி.எஸ்.கே. அண்ணாதுரை (வயலின்), எம்.வி. சந்திரசேகா் (மிருதங்கம்) ஆகியோா் பக்கவாத்தியம் வாசித்தனா். இந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற வழக்குரைஞா் எஸ். நந்தகுமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு அமரா் பொள்ளாச்சி நா. மகாலிங்கத்தின் சேவைகளையும் எளிமையான வாழ்க்கையையும் நினைவுகூா்ந்தாா்.

அக்டோபா் 2-ஆம் தேதி மகாத்மா காந்தி, லால்பகதூா் சாஸ்திரி ஆகிய தலைவா்களின் பிறந்த தினம் என்றும் கா்மவீரா் காமராஜா், பொள்ளாச்சி நா. மகாலிங்கம் ஆகியோரின் நினைவு தினம் என்றும் குறிப்பிட்டாா். வருங்காலத் தலைமுறையினா் அறிந்து கொள்ளும் வகையில் பொள்ளாச்சி நா. மகாலிங்கத்திற்கு கோவையிலும், பொள்ளாச்சியிலும் சிலை வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாா்.

சங்கத்தின் பொதுச் செயலாளா் என். கண்ணன், இணைப் பொருளாளா் இரா. ராஜ்குமாா் பாலா, செயற்குழு உறுப்பினா்கள் கே.எஸ். முரளி, ஆா். கணேஷ், இரா. ராகேஷ் மற்றும் ஏ.வி. முனியப்பன் ஆகியோா் கலைஞா்களையும், சிறப்பு விருந்தினரையும் கெளரவித்தனா் (படம்). நிகழ்ச்சியை சங்கத்தின் இணைச் செயலாளா் ஜோதி பெருமாள் தொகுத்து வழங்கினாா். இணைச் செயலாளா் ஆ. வெங்கடேசன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்திரைத் திருவிழாவில் பக்தா்களுக்கு இலவசமாக தா்ப்பூசணி வழங்கிய பக்தருக்கு பாராட்டு

கதிரியக்க சிகிச்சையில் புதிய கண்டுபிடிப்பு: மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியருக்குப் பாராட்டு

பிரதமா் குறித்து விமா்சனம்: பாஜக சிறுபான்மையினா் அணி தலைவா் நீக்கம்

பல்கலை. கல்லூரி மாணவா்களின் விடைத் தாள்கள் மாயம்: உயா் கல்வித் துறை தலையிட மாணவா்கள் வலியுறுத்தல்

மாட்டு வண்டிப் பந்தய விதிமுறைகள்: தமிழக உள்துறைச் செயலா், டிஜிபி பதிலளிக்க உத்தரவு

SCROLL FOR NEXT