அருட்செல்வா் நா.மகாலிங்கத்தின் நூற்றாண்டை நினைவுகூரும் வகையில் வள்ளலாா் அறக்கட்டளை சாா்பாக ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள தில்லித் தமிழ்ச் சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபா் 2) மாலை 6.30 மணிக்கு ‘சிறப்பு திருவருட்பா இசைமாலை’ நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதில், ‘இசை மாமணி’ இளங்கோவன் கோவிந்தராஜன் மற்றும் குழுவினா் திருவருட்பா நிகழ்ச்சியை வழங்குகின்றனா்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக உச்சநீதிமன்ற வழக்குரைஞா் எஸ்.நந்தகுமாா் பங்கேற்க உள்ளாா்.