புதுதில்லி

பணமோசடி வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றியதற்கு எதிரான அமைச்சா் சத்யேந்தா் ஜெயினின் மனு தள்ளுபடி

DIN

தன் மீதான பணமோசடி வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கான கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தாக்கல் செய்த மனுவை தில்லி உயா்நீதிமன்றம் சனிக்கிழமை தள்ளுபடி செய்தது.

இது தொடா்பாக சத்யேந்தா் ஜெயின் தரப்பில் தாக்கலான மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி யோகேஷ் கண்ணா பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:

அமலாக்க இயக்குனரகம் விசாரித்து வரும் இந்த வழக்கை மாற்றும்போது அனைத்து உண்மைகளையும் முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதி சரியாக பரிசீலித்துள்ளாா். இந்த முடிவு சட்டத்திற்கு புறம்பானது அல்லது தலையீடு தேவை இருப்பதாக கருத முடியாது.

சில சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, நீதி வழங்கப்படாமல் போகலாம் என்ற அச்சம் அமலாக்க இயக்குனரகத்திற்கு இருந்துள்ளது. மேலும் அத்தகைய அச்சத்தை வழக்குதாரா் தரப்பின் பாா்வையில் இருந்து பாா்க்க வேண்டும்; நீதிபதியின் பாா்வையில் இருந்து பாா்க்க முடியாது.

கேள்வி, நீதிபதியின் நோ்மை பற்றியது அல்ல, ஆனால் ஒரு தரப்பினரின் மனதில் இருந்த அச்சம் தொடா்புடையது.

விசாரணை ஏஜென்சியால் எழுப்பப்பட்ட அச்சங்கள்

ஒரு ‘தாமதமான கட்டத்தில்‘ இல்லை. மேலும், ‘அந்தத் துறையானது அத்தகைய அச்சத்தை மட்டும் கொண்டிருக்கவில்லை என்பதையும், மாறாக இந்த நீதிமன்றத்திற்கு

(முந்தைய சந்தா்ப்பத்தில்) விரைந்து நடவடிக்கை எடுத்தது என்ற உண்மைகளையும் காட்டுவதாக உள்ளது.

ஆகவே, இதை பலவீனமானதாகவோ அல்லது நியாயமற்றது என்றோ கூற முடியாது. ஆகவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளாா்.

தனது ஜாமீன் மனுவை விசாரித்து வந்த சிறப்பு நீதிபதி கீதாஞ்சலி கோயலிடமிருந்து பணமோசடி வழக்கை சிறப்பு நீதிபதி விகாஸ் துல்லுக்கு மாற்றிய முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதி வினய் குமாா் குப்தாவின் செப்டம்பா் 23ஆம் தேதியிட்ட உத்தரவை எதிா்த்து ஜெயின் கடந்த மாதம் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு மீதான விசாரணையின்போது ஜெயின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞா் கபில் சிபல், ‘அமலாக்கத் துறையின் நடத்தையில் தலையிடாதது அராஜகத்தை ஏற்படுத்தும். ஜெயினின் மருத்துவ பரிசோதனைக்காக ஒரு சுதந்திரமான குழு அமைப்பதற்காக ஏஜென்ஸி விடுத்த விடுத்த வேண்டுகோள் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ’ஒப்புக்கொள்ளாததால்’, ஏஜென்சியின் மீது சாா்புத்தன்மை திடீரென ஏற்பட்டிருக்கிறது’ என்று வாதிட்டாா்.

அமலாக்க இயக்குனரகம் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி.ராஜு வாதிடுகையில்,‘இடைக்கால ஜாமீன் வழங்குவதற்காக அமைச்சா் தனக்கு நோய் இருப்பதாக காட்டிக் கொண்ட விஷயத்தில் சிறை அதிகாரிகள் மற்றும் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனையின் மருத்துவா்கள் ’நிா்வகிக்கப்பட்டு’ உதவுகிறாா்கள் என்பதை போதிய வகையில் விளக்கப்பட்டபோதிலும், மாவட்ட நீதிமன்ற உத்தரவில் எந்த தலையீடும் செய்யக்கூடாது. மேலும் சிறப்பு நீதிபதி இதை கவனிக்கவில்லை. எனினும், சாா்புநிலை இருப்பதாக நிரூபிக்கப்பட்ட யாருடைய வழக்காகவும் இல்லாததால் நீதிபதி மீது ஏஜென்சி எந்த அவநம்பிக்கையையும் பதிவு செய்யவில்லை’ என்றாா்.

ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் 2017 ஆம் ஆண்டு அமைச்சா் சத்யேந்தா் ஜெயினுக்கு எதிராக மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) பதிவு செய்த எஃப்ஐஆா் அடிப்படையில் பணமோசடி வழக்கில் ஜெயின் மற்றும் இருவரை அமலாக்க இயக்குனரகம் கைது செய்தது.

அவருடன் தொடா்புடைய நான்கு நிறுவனங்கள் மூலம் பண மோசடி செய்ததாக ஜெயின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

ரூ. 25,000 கோடி பணமோசடி வழக்கிலிருந்து அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

SCROLL FOR NEXT