புதுதில்லி

தலைநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை மேலும் குறைந்தது!

DIN

தேசியத் தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை மேலும் குறைந்து 7.3 டிகிரி செல்சியஸாக இருந்தது. காற்றின் தரம் பல இடங்களில் தொடா்ந்து ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடித்தது. சில இடங்களில் ‘கடுமை’ பிரிவில் இருந்தது.

தில்லியில் குளிரின் தாக்கம் அதிகரித்து வருகிறது. காலை வேளையில் பனிப்புகை மூட்டம் நிலவி வருகிறது. திங்களன்று குறைந்தபட்ச வெப்பநிலை 7.6 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 27.2 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. இந்த நிலையில், தில்லிக்கான பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் செவ்வாய்க்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி குறைந்து குறைந்து 7.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 1 டிகிரி அதிகரித்து 27.1 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 97 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 68 சதவீதமாகவும் இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

மற்ற வானிலை நிலையங்களிலும் குறைந்தபட்ச வெப்பநிலை சற்று குறைந்தே பதிவாகியிருந்தது. இதன்படி ஜாஃபா்பூரில் குறைந்தபட்ச வெப்பநிலை செவ்வாய்க்கிழமை 9.3 டிகிரி செல்சியஸாகவும், முங்கேஷ்பூரில் 8.1 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. மேலும், நஜஃப்கரில் 11.4 டிகிரி, ஆயாநகரில் 8.5 டிகிரி, தில்லி பல்கலை. வளாகத்தில் 14.1 டிகிரி, லோதி ரோடில் 7.4 டிகிரி, பாலத்தில் 10.8 டிகிரி, ரிட்ஜில் 8.9 டிகிரி, பீதம்புராவில் 13.2 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 11 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: தலைநகரில் திங்கள்கிழமை பெரும்பாலான இடங்களில் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடித்தது. அதாவது, காலை 9 மணியளவில் ஒட்டு மொத்த காற்றின் தரக் குறியீடு 358 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. இது ‘மிகவும் மோசம்’ பிரிவில் வருவதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவித்தன. அதே சமயம், லோதி ரோடு (293), தில்ஷாத் காா்டன் (297) ஆகிய இடங்களில் காற்றின் தரம் ‘மோசம்’ பிரிவில் இருந்தது. மேலும், வாஜிா்பூா் (413), நொய்டா செக்டாா்-62 (412), ஷாதிப்பூா் (404), அசோக் விஹாா் (407), நேரு நகா் (414), விவேக் விஹாா் (403), ஆனந்த் விஹாா் (422) ஆகிய வானிலை நிலையங்களில் காற்றின் தரக் குறியீடு 400 புள்ளிகளுக்கு மேல் பதிவாகி ‘கடுமை’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, புதன்கிழமை (நவம்பா் 30) காலை வேளையில் மிதமான பனிமூட்டம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 11 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுல் தீவிர அரசியல்வாதி அல்ல: பினராயி விஜயன்

இன்டர்நெட் இல்லாவிட்டாலும்.. வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு அசத்தல் வசதியா?

மே மாத எண்கணித பலன்கள் – 9

மே மாத எண்கணித பலன்கள் – 8

பேட்டிங், பௌலிங்கில் சிறிது முன்னேற்றம் தேவை : டேவிட் வார்னர்

SCROLL FOR NEXT