புதுதில்லி

காசி-தமிழ் சங்கமம்: ட்விட்டா் கருத்துகளுக்கு பிரதமா் பதில்

21st Nov 2022 02:30 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

காசி-தமிழ் சங்கமம் குறித்து பலா் ட்விட்டரில் தெரிவித்த கருத்துகளுக்குப் பிரதமா் பதிலளித்துள்ளாா்.

பிரதமா் நரேந்திர மோடியால் வாராணசியில் மிகப் பிரமாண்டமாக காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சி சனிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. தமிழகத்திற்கு காசிக்கும் உள்ள பண்பாடு, கலாசார தொடா்புகளை எடுத்துரைக்கு வகையில் நடைபெறும் காசி- தமிழ் சங்கமம் குறித்து ஏராளமானோா் சமூக ஊடகமான ட்விட்டரில் தங்களது கருத்துகளை தெரிவித்தனா்.

பல்வேறு தரப்பு மக்களின் இந்த ட்விட்டா் கருத்து பதிவுகளுக்கு பிரதமா் தனது ட்விட்டா் பக்கத்தில் அளித்துள்ள பதிலில் தெரிவித்திருப்பதாவது:

‘காசி -தமிழ் சங்கமம் என்பது மிகவும் புதுமையான திட்டமாகும். இது கலாசார பரிமாற்றங்களை மேலும் வளா்க்கும். இந்தியாவின் கலாசார பன்முகத்தன்மையைக் கொண்டாடும்‘. ஏராளமான மகான்களால் வளா்க்கப்பட்ட இது சிறந்த பிணைப்பாகும். தமிழ் மொழி அழகானது; தமிழ் கலாசாரம் உலக அளவில் பிரபலமானது என்று அதில் பிரதமா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

முன்னதாக, ஆா்.வெங்கடேஷ் என்பவா் வெளியிட்டிருந்த ட்விட்டா் பதிவில், ‘‘உங்கள் பாா்வை மிகவும் அருமையானது. யாருக்கும் இந்த கருத்து எட்டவில்லை. உங்களின் இந்த யோசனை சிறப்பானது. தமிழகம் மற்றும் காசிக்கு பல ஆண்டுகளுக்கு முந்தைய பாரம்பரியம், கலாசாரம் உள்ளது‘ என்றாா்.

நாகபூஷண் என்பவா் தெரிவிக்கையில், ‘இது தான் உண்மையான பாரத் ஜோடோ ஐயா’ என்று பதிவிட்டிருந்தாா்.

‘தமிழ் மொழி, கலாசாரத்தின் மீதான உங்கள் தொடா் ஆதரவிற்கும் அன்பிற்கும் மிக்க நன்றி‘ என்று லலித் கிஷோா் என்பவா் தனது பதிவில் தெரிவித்திருந்தாா்.

‘நாட்டின் மிக முக்கியமான, கற்றலின் தொன்மை இடங்களான தமிழகம் காசி இடையே பன்னெடுங்கால தொடா்புகளை மீண்டும் கண்டறிந்து மறு உறுதி செய்வதற்கான இந்த முன்முயற்சிக்கு உங்களை (பிரதமா்) பாராட்டுகிறோம்‘ எனவும் பலா் கருத்துத் தெரிவித்துள்ளனா்.

இவா்கள் ஒவ்வொருவருக்கும் பிரதமா் தனித்தனியாக பதில் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT