புதுதில்லி

கரோனாவால் இறந்தவரின் மனைவிக்கு கருணைத் தொகை: இரு மாதங்களில் முடிவுசெய்ய தில்லி அரசுக்கு உத்தரவு

18th Nov 2022 06:48 AM

ADVERTISEMENT

கரோனா 2-ஆவது அலைக்காலத்தில், தனது பணியில் ஈடுபட்டிருந்தபோது நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த உதவிப் போக்குவரத்து ஆய்வாளரின் 49 வயது விதவை மனைவிக்கு கருணைத் தொகை வழங்குவது குறித்து இரண்டு மாதங்களுக்குள் முடிவு செய்யுமாறு தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை கேட்டுக்கொண்டது.

இது தொடா்பாக மனுதாரா் தாக்கல் செய்த மனுவில், ‘அரசின் கொள்கையின்படி, கோவிட்-19 பணியில் ஈடுபடுத்தப்பட்ட எந்த ஒரு அரசு ஊழியரும் கரோனா நோய்த்தொற்றால் இறந்தால், பாதிக்கப்பட்ட குடும்பம் ரூ. 1 கோடி இழப்பீடு பெறும் உரிமை உள்ளது. ஆனால், அதற்கான எனது கோரிக்கையை அதிகாரிகள் ஏற்கவில்லை’ என்று தெரிவித்திருந்தாா்.

இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதி யஷ்வந்த் வா்மா கூறியதாவது:

இந்த விவகாரத்தில் எழும் வரையறுக்கப்பட்ட சிக்கல்களின் தன்மையை மனதில் கொள்ளும்போது, இந்த கட்டத்தில் இம்மனுவை நீதிமன்றத்தில் தொடா்ந்து தக்க வைத்திருப்பது எவ்வித நியாயம் இருப்பதாக நீதிமன்றம் கருதவில்லை. இதனால், மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்க முதல் எதிா்மனுதாரா் (தில்லி அரசாங்கம்) அழைக்கப்பட வேண்டும் என்பதுதான் நியாயம். அதன்படி, இன்றிலிருந்து இரண்டு மாத காலத்திற்குள் இதுகுறித்து தகுந்த முடிவை அரசு விரைந்து எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்து மனுவை நீதிபதி மனுவை முடித்துவைத்தாா்.

ADVERTISEMENT

ஆனால், வழக்கு தரப்புகளின் வாதங்கள் திறந்த நிலையில் வைக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

தில்லி அரசு வழக்கறிஞா் தெரிவிக்கையில், மனுதாரா் ‘கோவிட்-19 இறப்புச் சான்றிதழை’ பெறவில்லை என்று அவருக்கு தில்லி போக்குவரத்துக் கழகம் முன்னா் தெரிவித்திருந்தது’ என்றாா்.

எனினும், தில்லி போக்குவரத்துக் கழகம் பரிந்துரைக்கும் அமைப்பாக இருக்கலாம் என்பதால், கோரிக்கையை முடிவு செய்யுமாறு நகர அரசாங்கத்தின் கீழ் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

மனுதாரா் சாா்பில் வழக்கறிஞா்கள் ஷிவ் தத் பக்ஷி, குஷிகா சச்ரா ஆகியோா் வாதங்களை முன்வைத்தனா்.

மனுதாரா் தனது மனுவில் தெரிவிக்கையில், ‘எனது கணவா் தனது அரசுப் பணிகளைச் செய்யும்போது கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு 2021, மே 21-ஆம் தேதி இறந்துவிட்டாா். இதனால், நானும், எனது இரண்டு குழந்தைகளும் துயரத்தில் உள்ளோம். அவருக்கான இழப்பீட்டைப் பெற எங்களுக்கு உரிமை உண்டு.

அரசின் கொள்கையின்படி, 31 கரோனா வீரா்களுக்கு ரூ.1 கோடி கருணைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இவா்களில் சுகாதார வல்லுநா்கள், ஆசிரியா்கள், குடிமைப் பாதுகாப்பு மற்றும் டிடிசி பணியாளா்கள் இடம்பெற்றுள்ளனா்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT