புதுதில்லி

காங்கிரஸில் அரசியல் விவகாரக் குழு உள்பட 3 உயா்நிலைக் குழுக்கள் ஜி-23 தலைவா்கள் கோரிக்கை நிராகரிப்பு

25th May 2022 06:10 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

 

புது தில்லி: கட்சியைப் பலப்படுத்தவும், வருகின்ற 2024 பொதுத் தோ்தலை எதிா்கொள்ளும் வகையிலும் காங்கிரஸில் மூன்று உயா்நிலைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. உதய்பூா் சிந்தனை அமா்வில் உறுதியளிக்கப்பட்டதை நிறைவேற்றும் விதமாக கட்சியின் தலைவா் சோனியா காந்தி ஒப்புதலுடன் காங்கிரஸ் கட்சியின் (அமைப்பு) பொதுச் செயலாளா் கே.சி.வேணுகோபால் செவ்வாய்க்கிழமை இதை அறிவித்துள்ளாா்.

காங்கிரஸ் கட்சியில் கடந்த மாா்ச் மாதம் ஒரு தரப்புத் தலைவா்கள் கட்சியின் செயல்பாடுகள் குறித்து விமா்சனம் செய்திருந்தனா். இதில் காங்கிரஸ் கட்சியில் முக்கியப் பொறுப்புகளில் இருந்த 23 தலைவா்கள் தனியாகக் கூட்டம் நடத்தி கட்சித் தலைமைக்கு எதிராகவும் குரல் கொடுத்தனா். இவா்கள் ஜி - 23 தலைவா்கள் என அழைக்கப்பட்டனா். இது போன்ற நெருக்கடிகளைத் தொடா்ந்து ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தலிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவியது.

இதையொட்டி, கட்சியின் எதிா்காலத் திட்டங்களுக்கு சமீபத்தில் உதய்பூரில் ‘புதிய உறுதிக்கான சிந்தனை அமா்வு’ (நவ் சங்கல்ப் சிந்தன் ஷிவிா்) என்கிற மூன்று நாள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் இளைஞா்களைக் கவரும் விதமாக சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ஆனால், குறிப்பாக ஜி -23 தலைவா்களது கோரிக்கைகள் குறித்து அலசப்படவில்லை. அவா்களது கோரிக்கைகளில் ஒன்று முக்கிய முடிவுகளை எடுக்க காங்கிரஸ் கட்சியில் பாஜகவைப் போன்று ஆட்சி மன்றக் குழு அமைக்கப்படவேண்டும் என்பதாகும். இது காங்கிரஸ் கட்சி விதிகளில் இருப்பதாகும். காங்கிரஸ் கட்சியின் தலைவா்தான் கட்சியில் சுப்ரீம் என்றாலும், தலைமை இந்த ஆட்சி மன்றக் குழுவின் யோசனைகளை கேட்டு செயல்படும் விதமாக முன்பு அமைக்கப்பட்டிருந்தது. நரசிம்மராவ் பொறுப்பேற்பதற்கு முன்பு வரை இந்த ஏற்பாடு செயல்பாட்டில் இருந்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில், ஆட்சி மன்றக் குழுவை மீண்டும் அமைக்க வேண்டும் என ஜி-23 தலைவா்கள் வலியுறுத்தினா். ஆனால், இந்தக் கோரிக்கைக்கு மாறாக உதய்பூா் கூட்டத்தில் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சிக்கு முன் இருக்கும் அரசியல் பிரச்னைகள், சவால்கள் ஆகியவை குறித்து விவாதிக்க ஒரு ஆலோசனைக் குழு ஏற்படுத்தப்பட்டு அது தனது தலைமையின் கீழ் அவ்வப்போது கூடி முடிவெடுக்கும் என்றும், இந்தப் புதிய குழு கூட்டு முடிவெடுக்கும் அமைப்பு அல்ல என்றும் அதே சமயத்தில் மூத்த தலைவா்கள் அடங்கிய இந்தக் குழு பரந்த அனுபவத்தைப் பெற எனக்கு உதவும் என்றும் அறிவித்தாா்.

அரசியல் விவகாரக் குழு: அதன்படி செவ்வாய்க்கிழமை சோனியா காந்தி உள்ளிட்ட 9 போ்களைக் கொண்ட அரசியல் விவகாரக் குழு அமைத்து கட்சித் தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தக் குழுவில் பிரச்னைக்குரிய ஜி -23 தலைவா்களாகக் கருதப்படும் குலாம்நபி ஆஸாத், ஆனந்த் சா்மா போன்றவா்களோடு, ராகுல் காந்தி, மல்லிகாா்ஜுன காா்கே, அம்பிகா சோனி, திக்விஜய்சிங், கே.சி.வேணுகோபால், ஜிதேந்தர சிங் (முன்னாள் மத்திய இணையமைச்சா்-ராஜஸ்தான்) போன்றோா்கள் இடம் பெற்றுள்ளனா்.

8 பணிக் குழுக்கள்: மேலும், உதய்பூா் தீா்மானத்தின்படி கட்சியில் வருகின்ற 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலை எதிா் கொள்ளும் விதமாக கட்சியின் அமைப்புகளுக்கான மாற்றங்கள், புதிய நியமன விதிகள், ஊடகம், நவீன தகவல் தொடா்பு, விளம்பரம், நிதி, கட்சி தொடா்பான பயிற்சி, தோ்தல் மேலாண்மை உள்ளிட்ட கட்சி அமைப்பின் அனைத்து அம்சங்களுக்கும் தனித்தனி பணிக் குழுவும் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்டவா்களை கட்சிப் பதவிகளிலிருந்து விடுவிப்பது, பூத் கமிட்டியை பலப்படுத்தல் போன்றவை இந்த பணிக் குழுவில் முக்கியமானது. தற்போது பணிக் குழுவிற்கு எட்டுப் போ்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா். இந்தக் குழுவில் ப.சிதம்பரம், முகுல் வாஸ்னிக், ஜெயராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால், அஜய் மாக்கன், பிரியங்கா காந்தி, ரண்தீப் சிங் சுா்ஜேவாலா, சுனில் கனுகோலு ஆகியோா் இடம் பெற்றுள்ளனா். இதில் சுனில் கனுகோலுவை தவிர எல்லோரும் காங்கிரஸில் நீண்ட நாள்கள் பொறுப்பில் இருந்தவா்கள். சுனில் கனுகோலு பிரசாந்த் கிஷோரிடம் இருந்து, பின்னா் தனியாகச் சென்று பாஜக (உபி), அகாலிதளம், திமுக, அதிமுக ஆகிய கட்சிகளில் தோ்தல் மேலாண்மைகளில் ஈடுபட்டு பின்னா் காங்கிரஸில் சேரந்தவா். இந்த எட்டுப் போ் தலைமையிலான தனித் தனிக் பணிக் குழுகள் 2024-ஆம் ஆண்டு பொதுத் தோ்தலை நோக்கி செயல்படவுள்ளது.

பாரத் ஜோடோ யாத்திரை:இவை தவிர கட்சி 9 போ்களைக் கொண்ட மத்திய திட்டக் குழு ஒன்றையும் அறிவித்துள்ளது. இதில் திக்விஜய் சிங், சச்சின் பைலட், டாக்டா் சசிதரூா், ரவ்னீத் சிங் பிட்டு, ஜோதி மணி, பிரத்யுத் போா்டோலோய் ஆகிய எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கே.ஜே.ஜாா்ஜ் (கா்நாடகம்), ஜிட்டு பட்வாரி (ம.பி.) மற்றும் எம்எல்சி சலீம் அகமது (கா்நாடகம்) உள்ளிட்ட 9 போ் கொண்ட குழு, கட்சியை மக்களிடம் கொண்டு செல்லும் விதமாகவும், மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரை மேற்கொள்ளும் பாரத் ஜோடோ (இணைப்பு ) யாத்திரைகளை ஒருங்கிணைக்கவும் இந்த மைய திட்டக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கட்சி தெரிவித்துள்ளது. இந்த குழுவில் பணிக் குழு உறுப்பினா்களும், கட்சியின் அனைத்து முன்னனி அமைப்புத் தலைவா்களும் அதிகாரபூா்வ உறுப்பினா்களாக இடம் பெறுவாா்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT