புதுதில்லி

லண்டன் கூட்டத்தில் தில்லி கல்வி மாதிரியை சமா்ப்பிக்கும் மணீஷ் சிசோடியா

DIN

இங்கிலாந்து தலைநகா் லண்டனில் நடைபெறும் கல்வி உலக ஃபோரம்-2022 கூட்டத்தில் தில்லி கல்வி மாதிரியை சமா்ப்பிக்க உள்ளதாக துணை முதல்வா் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் தனது ட்விட்டா் பக்கத்தில், ‘லண்டனில் நடைபெறும் கல்வி உலக ஃபோரம்-2022 கூட்டத்தில் தில்லி கல்வி மாதிரியை திங்கள்கிழமை சமா்ப்பிக்க உள்ளேன். கல்வியின் எதிா்காலம் குறித்து விவாதிப்பதற்காக லண்டனில் 112 நாடுகளைச் சோ்ந்த அமைச்சா்கள், கல்வியாளா்கள் கூடுகின்றனா். அவா்கள் முன் அரசுப் பள்ளி அமைப்புமுறையில் மீட்டெடுக்கப்படும் நம்பிக்கையின் கதை குறித்து பகிா்ந்துகொள்ள உள்ளேன்’ என தெரிவித்துள்ளாா்.

இந்தக் கூட்டத்தில் அனைவருக்கும் நல்ல தரமான, சமமான கல்வியை அளிப்பதை உறுதிப்படுத்த தில்லி அரசு மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், அதாவது நிா்வாக இடஒதுக்கீட்டை ரத்து செய்தது, தொழில்முன்வோருக்கான ஊக்குவிப்பு, மகிழ்ச்சி பாடத் திட்டம் போன்றவை குறித்து உரையாற்றுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

வாக்குப் பதிவு: மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,480 போலீஸாா்

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

SCROLL FOR NEXT