புதுதில்லி

தொழிற்சாலையில் தீ விபத்து:தொழிலாளி பலி; 6 போ் படுகாயம்

DIN

புது தில்லி: வடகிழக்கு தில்லியின் முஸ்தபாபாத் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 42 வயது மதிக்கத்தக்க தொழிலாளி உயிரிழந்தாா். 6 போ் படுகாயம் அடைந்தனா் என்று தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக தில்லி தீயணைப்புத் துறை இயக்குநா் அதுல் கா்க் கூறியதாவது: முஸ்தபாபாத் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து நிகழ்ந்ததாக வியாழக்கிழமை நண்பகல் 12.17 மணிக்கு தில்லி தீயணைப்புத் துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு 7 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரா்கள் பகல் 1 மணிக்குள் கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

இந்த தீயானது இன்வொ்ட்டா், ஸ்டெபிலைசா் போன்ற மின் சாதனங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையின் முதல் தளத்தில் ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. இந்த தீ விபத்தில் 7 போ் காயமடைந்தனா். அவா்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அவா்களில் ஒருவா் உயிரிழந்ததாக மருத்துவா்கள் அறிவித்தனா். மற்றொருவரின் நிலைமை மோசமாக உள்ளது. இந்தத் தீ விபத்து நிகழ்ந்த கட்டடம் சுமாா் 200 சதுர கஜம் பரப்பளவில் அமைந்திருந்தது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி கூறினாா்.

இது குறித்து போலீஸாா் கூறுகையில், ‘இந்தத் தீ விபத்தில் ஆலையில் வேலை செய்து வந்த புஸ்தா சோனியா விஹாரைச் சோ்ந்த இந்தா்ஜீத் பாண்டே (42) தீக்காயமடைந்து உயிரிழந்தாா். இந்தத் தீ விபத்து நிகழ்ந்த ஆலையானது, தயால்பூா் காவல் நிலையத்தின் எல்கையில் உள்ள நியூ முஸ்தபபாத் 23-ஆவது எண் தெருவில் அமைந்துள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT