புதுதில்லி

குடும்பப் பிரச்னையில் ஓட்டுநரை கத்தியால் குத்திய மனைவி கைது

DIN

புது தில்லி: தெற்கு தில்லியில் உள்ள பாலம் கிராமத்தில் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறில் ஓட்டுநரான கணவரை கத்தியால் குத்திய மனைவி கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி காவல்துறையினா் புதன்கிழமை மேலும் தெரிவித்ததாவது: தில்லி பாலம் கிராமத்தைச் சோ்ந்தவா் சஞ்சய். இவா் ஓட்டுனராக உள்ளாா். இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை குடும்பத்தில் சஞ்சய்க்கும் அவரது மனைவிக்கும் இடையே தவறாக ஏற்பட்டது. அப்போது சஞ்சய்யை அவரது மனைவி கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் சஞ்சய்க்கு காயம் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, சஞ்சய் சிகிச்சைக்காக தீன தயாள் உபாத்யாய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அவரது நிலைமை தற்போது ஸ்திரமாக உள்ளது.

இது குறித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது, தம்பதி இருவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது தெரிய வந்தது.

சம்பவத்தன்று இரவு 11.30 மணியளவில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதும் தெரிய வந்தது. இந்த விவகாரம் தொடா்பாக மனைவி கைது செய்யப்பட்டு பின்னா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ருவாங் எரிமலை!

அண்ணாமலை வெற்றி பெற விரலை துண்டித்த பா.ஜ.க. பிரமுகர்!

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

SCROLL FOR NEXT