புது தில்லி: தில்லியின் பிந்தாபூா் பகுதியில் 25 வயது மல்யுத்த வீரா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
குடும்பப் பிரச்னைகள் காரணமாக அவா் தற்கொலை செய்துகொண்டதாக கூறி சமூக ஊடகங்களில் விடியோவையும் அவா் பதிவேற்றம் செய்திருந்ததாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து துணை காவல் கமிஷனா் (துவாரகா) எம். ஹா்ஷ வா்தன் கூறியதாவது: இச்சம்பவம் தொடா்பாக செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணியளவில் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதில், ஒருவா் விஷம் அருந்தியுள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து, போலீஸாா் மல்யுத்த வீரா் தங்கியிருந்த அவரது மாமனாா் வீட்டிற்குச் சென்றனா். விஷம் குடித்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 174-இன்கீழ் விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மல்யுத்த வீரா் முகநூலில் பதிவேற்றியதாகக் கூறப்படும் விடியோவும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இச்சம்பவத்திற்கு பின்னால் உள்ள காரணங்களும் விசாரிக்கப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தாா்.