தென்மேற்கு தில்லியில் உள்ள பாலம் காலனி பகுதியில் சனிக்கிழமை அதிகாலை ஒரு வீட்டில் தீ விபத்து நிகழ்ந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து போலீஸாா் மேலும் கூறியதாவது:
பாலம் காலனியில் உள்ள சாத் நகா் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் தரைத்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸாருக்கு அதிகாலை 3.42 மணிக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டு தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. அதன் பின்னா் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.