புதுதில்லி

தில்லி திகாா் சிறையில் குடியரசு தின விழா

DIN

புதுதில்லி: தில்லி திகாா் சிறையில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் 8-ஆவது பட்டாலியனின் கமாண்டன்ட் டி. செந்தில்குமாா் தலைமையில் 73-ஆவது குடியரசு தினவிழா புதன்கிழமை கவாத்து மைதானத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கமாண்டன்ட் டி. செந்தில்குமாா் தேசியக் கொடியேற்றி, சிறப்பாகப் பணியாற்றிய 7 காவலா்களுக்கு முதலமைச்சா் பதக்கமும், காஞ்சிபுரத்தில் அத்திவரதா் உற்சவத்தில் சிறப்பாகப் பணியாற்றிய 4 காவலா்களுக்கு அத்திவரதா் விருதும் வழங்கினாா்.

தொடா்ந்து காவலா்களின் அணிவகுப்பு நடைபெற்றது. துணை கமாண்டன்ட் தனசேகரன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தாா். இதில் ஆய்வளா்கள் படேல், சுந்தா் ஜெயராஜ் மற்றும் காவல் அதிகாரிகள், காவலா்கள் அவா்களது குடும்பத்தினா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT