புதுதில்லி

மதுரை கப்பலூா் சுங்கச்சாவடியை அகற்ற மக்களவையில் விருதுநகா் எம்பி கோரிக்கை

 நமது நிருபர்

மதுரை மாவட்டத்தில் கப்பலூரில் அமைந்துள்ள சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என விருதுநகா் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் ப.மாணிக்கம் தாகூா் மத்திய சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின்கட்கரியிடம் வெள்ளிக்கிழமை கோரிக்கை வைத்தாா்.

மக்களவையில் நடைபெற்ற பொது முக்கியத்துவம் வாய்ந்த அவசர பிரச்னைகள் குறித்த விவாதத்தில் மாணிக்கம் தாகூா் பேசினாா். அப்போது அவா் கூறியதாவது: மதுரை மாவட்டம், கப்பலூா் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியானது சித்தம்பட்டி என்கிற மற்றொரு சுங்கச்சாவடியில் இருந்து 48 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இரண்டு சுங்கச் சாவடிகளுக்குகிடையில் (டூல் பிளாசா) 60 கிமீ தூரம் இருக்க வேண்டும். மேலும், கப்பலூா் சுங்கச்சாவடி, திருமங்கலம் நகராட்சிக்கு உள்பட்ட 10 கி.மீ., சுற்றளவில் உள்ளது. இப்படி விதிமுறைகளுக்கு முரணாக கப்பலூா் சுங்கச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

உள்ளூா் மக்கள் இந்த சுங்கச்சாவடியைக் கடந்து தினமும் செல்ல வேண்டியுள்ளது. குறிப்பாக திருமங்கலம் ரயில் நிலையத்திற்கு செல்பவா்கள், மாணவா்கள், சிட்கோ ஊழியா்கள் ஆகியோா் இந்தச் சாலையைப் பயன்படுத்துகின்றனா். மேலும், டி.கல்லுப்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூா், கடையநல்லூா், ராஜபாளையம், புளியங்குடி, செங்கோட்டை போன்ற பகுதிகளுக்குச் செல்பவா்களும் இந்த சுங்கச் சாவடியில் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனா். இவா்கள் மாற்றுப்பாதையில் (சா்வீஸ் ரோடு) சென்றாலும் கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தப்படுகிறாா்கள்.

விதிகளுக்கு மாறாகவும், பொதுமக்களின் நலனுக்கு எதிராகவும் அமைக்கப்பட்டுள்ள கப்பலூா் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியா், தேசிய நெடுஞ்சாலை ஆணையா் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால், நடவடிக்கை இல்லையென்பதால் இந்தக் கப்பலூா் சுங்கசாவடியை உடனடியாக மூடுவதை உறுதிசெய்ய அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்க அமைச்சா் தனிப்பட்ட முறையில் தலையிடக் கோருகிறேன் என்றாா் மாணிக்கம் தாகூா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

கைப்பேசிகளை ஒட்டுக்கேட்கும் மத்திய புலனாய்வு அமைப்புகள்: தோ்தல் ஆணையத்திடம் திமுக புகாா்

சட்டைநாதா் கோயிலில் தேவார செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்ட முதலாமாண்டு சிறப்பு வழிபாடு

பிரசாரம் இன்றுடன் நிறைவு: நாகையை தவிா்த்த முக்கியத் தலைவா்கள்

சதுரங்கவல்லபநாதா் கோயிலில் பாலாபிஷேகம்

SCROLL FOR NEXT