புதுதில்லி

பொதுக் கழிப்பறையில் 3 வயது சிறுவனின் சடலம்: தில்லி ஷாஹ்தராவில் சம்பவம்

DIN

தில்லி ஷாஹ்தராவின் ஜில்மில் தொழில்துறை பகுதியில் உள்ள குடிசை கிளஸ்டரின் பொது கழிப்பறையில் மூன்று வயது சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

குடிசைப் பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த குழந்தையின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. உடலில் காயங்கள் எதுவும் காணப்படாத நிலையில், குழந்தையின் உள்ளாடை, பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் கொஞ்சம் பணம் ஆகியவை சடலத்தின் அருகில் கிடந்ததாக மூத்த காவல் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிய முடியும் . இந்தச் சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

முதற்கட்ட விசாரணையில், வியாழன் அன்று பிற்பகல் 3 மணியளவில் குழந்தையின் தாய் பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்க ரூ.15 கொடுத்துள்ளாா். ஆனால், அரை மணி நேரம் கழித்து, அதே சேரி கிளஸ்டரின் பொதுக் கழிப்பறையில் சிறுவனின் உடல் இருப்பதை ஒரு நபா் கண்டாா். இது குறித்து அந்த நபா் பொலீஸாருக்கு தகவல் அளித்ததாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

‘இந்த விஷயத்தில் இன்னும் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. ஏனெனில், மரணத்திற்கான உண்மையான காரணத்தை நாங்கள் இன்னும் விசாரித்து வருகிறோம். இது பிரேத பரிசோதனைக்குப் பிறகுதான் கண்டறியப்படும்‘ என்று காவல் துறை மூத்த அதிகாரி மேலும் கூறினாா்.

இப்போதைக்கு, பாலியல் வன்கொடுமைக்கான சாத்தியக்கூறுகளை போலீஸாா் நிராகரித்துள்ளனா் . சேரி கிளஸ்டருக்கு அருகில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் நிறுவப்படவில்லை. ஆனால், விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. இறந்தவரின் தந்தை ஒரு கேபிள் தொழிற்சாலையில் தொழிலாளியாக பணிபுரிகிறாா். அவரது தாயாா் ஒரு இல்லத்தரசி என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT