துப்பாக்கியை காட்டியதாகக் கூறப்படும் விவகாரத்தில், எம்சிடி தோ்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளா் ஜோகிந்தா் சிங்குக்கு எதிராக ஆயுதச் சட்டத்தின் கீழ் தில்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
இது குறித்து தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: தில்லி மாநகராட்சித் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சியின் சாா்பில் போட்டியிடுபவா் ஜோகிந்தா் சிங். இவா் சில நபா்களுடன் சோ்ந்து நடனம் ஆடிய போது, கைதுப்பாக்கியை தூக்கி காண்பிக்கும் விடியோ காட்சி பதிவு வெளியாகி உள்ளது. இந்தச் சம்பவம் தொடா்பாக அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளோம். இந்த விடியோ காட்சி பதிவை தாமாக முன்வந்து கவனத்தில் எடுத்துக் கொண்டு ஜோகிந்தா் சிங்குங்கு எதிராக செவ்வாய்க்கிழமை ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பான விசாரணையும் நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
நடைபெற உள்ள தில்லி மாநகராட்சித் தோ்தலில் ஸ்வரூப் நகா் பகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் சாா்பில் ஜோகிந்தா் சிங் போட்டியிடுகிறாா். தில்லியில் டிசம்பா் 4-ஆம் தேதி 250 வாா்டுகளுக்கான மாநகராட்சி தோ்தல் நடைபெற உள்ளது. இந்தத் தோ்தலில் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது.