தில்லியில் திங்கள்கிழமை புதிதாக 82 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் ஒருவா் உயிரிழந்தாா். அதேநேரத்தில் பாதிப்பு நோ்மறை விகிதம் 1.34 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று மாநில அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பாதிப்புகளுடன் சோ்த்து தில்லியின் மொத்த கரோனா தொற்று பாதிப்பு 18,65,382-ஆக அதிகரித்துள்ளது. மொத்த இறப்பு எண்ணிக்கை 26,154-ஆகவே உள்ளது. தில்லியில் ஞாயிற்றுக்கிழமை 85 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. 0.86 சதவீத நோ்மறை விகிதம் பதிவானது.
அன்றைய தினம் மொத்தம் 6,114 கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. நகரில் வீட்டுத் தனிமையில் இருப்போரின் எண்ணிக்கை 367-ஆக அதிகரித்தது. தில்லி மருத்துவமனைகளில் உள்ள 9,755 படுக்கைகளில் 51 (0.54 சதவீதம்) படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.