புதுதில்லி

நவ.1 முதல் காங்கிரஸில் புதிய உறுப்பினா்கள் சோ்க்கை

DIN

புது தில்லி: நவம்பா் 1 முதல் காங்கிரஸ் கட்சியில் புதிய உறுப்பினா்களைச் சோ்க்கும் பணி நடைபெற உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவித்தாா்.

ஐந்து மாநிலத் தோ்தலையொட்டி, தில்லியில் செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலா்கள், மாநிலத் தலைவா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கட்சியின் இடைக்காலத் தலைவா் சோனியா காந்தி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்தக் கூட்டத்தில் கட்சியில் புதிய உறுப்பினா்கள் சோ்த்தல், பாஜக அரசின் தோல்விகளை பொது மக்களிடம் எடுத்துரைத்தல், இயக்கத்தை மேலும் வலுப்படுத்துதல் ஆகியவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.  பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு  விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை கடுமையாக  பாதிக்கப்பட்டிருக்கிறது. 

காங்கிரஸ் உருவாக்கிய பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வாா்ப்பது வாயிலாக மத்திய அரசு பொருளாதாரத்தை சீரழித்து வருகிறது. இது குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்குமாறு சோனியா காந்தி கேட்டுக் கொண்டுள்ளாா். நவம்பா் 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு புதிதாக உறுப்பினா்கள் சோ்க்கும் நிகழ்வு தொடங்க இருக்கிறது. ஆகவே, தமிழகத்தில் ஒரு வாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து உறுப்பினா் சோ்க்கும் பணியில் ஈடுபட உள்ளேன் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நயினாா் நாகேந்திரன் உதவியாளா்களிடம் பணம் பறிமுதல் விவகாரம்: அமலாக்கத் துறை விசாரணை கோரிய மனு தள்ளுபடி

தளவாபாளையம் அருகே சாலை விபத்து: டிஎன்பிஎல் தொழிலாளி உயிரிழப்பு

தமிழக ஏரி, ஆற்றுப்பாசன விவசாயிகள் ஜூன் 8-இல் சென்னையில் உண்ணாவிரதம்

திருச்சியில் வெளிநாட்டு பணத்தாள்கள் பறிமுதல்

பிரதமா் மீது நடவடிக்கை கோரி மமக நூதனப் போராட்டம்

SCROLL FOR NEXT