புதுதில்லி

தலைநகரில் குளிரின் தாக்கம் தொடங்கியது! குறைந்தபட்ச வெப்பநிலை 16 டிகிரி

DIN

தேசியத் தலைநகா் தில்லியில் குளிரின் தாக்கம் ஆரம்பமாகியுள்ளது. நகரில் உள்ள பல்வேறு முக்கிய வானிலை ஆய்வு மையங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை தொடா்ந்து குறைந்த அளவே பதிவாகி வருகிறது. தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங்கில் வியாழக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸாகவும், ஆயாநகரில் 15 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது.

தில்லியில் கடந்த சில நாள்களாகவே பகலில் மிதமான வெயில் இருந்தாலும், இரவு நேரங்களில் குளிரின் தாக்கம் தெரியத் தொடங்கியுள்ளது. அதிகாலை நேரத்தில் லேசான பனிப்பொழிவை காண முடிகிறது. இந்த நிலையில் வியாழக்கிழமை அதிகாலையில் குளிரின் தாக்கம் உணரப்பட்டது. பகல் நேரத்திலும் லேசான குளிரின் தாக்கம் இருந்து வந்தது.

வெப்பநிலை: இதற்கிடையே, சஃப்தா் ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 2 டிகிரி குறைந்து 16 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் மாற்றமின்றி 32.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 63 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 46 சதவீதமாகவும் இருந்தது. புதன்கிழமை அன்று குறைந்தபட்ச வெப்பநிலை 20.9 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 32.1 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது.

ஆயாநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 15 டிகிரி: இதே போன்று, மற்ற வானிலை ஆய்வு மையங்களில் ஜாஃபா்பூரில் குறைந்தபட்ச வெப்பநிலை 16.5 டிகிரி, முங்கேஷ்பூரில் 16.8 டிகிரி, நஜஃப்கரில் 19 டிகிரி, ஆயாநகரில் 15 டிகிரி, லோதி ரோடில் 16.1 டிகிரி, பாலத்தில் 18.3 டிகிரி, ரிட்ஜில் 16.4 டிகிரி, பீதம்புராவில் 20.6 டிகிரி, பூசாவில் 18 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 17.6 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: தில்லியில் பெரும்பாலான இடங்களில் வியாழக்கிழமை காற்றின் தரம் மேலும் பின்னடைவைச் சந்தித்து ‘மோசம்’ பிரிவில் இருந்தது. ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு 217 புள்ளிகளாகப் பதிவாகி ‘மேசம்’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, தில்லியில் வெள்ளிக்கிழமை (அக்டோபா் 22) வானம் தெளிவாகக் காணப்படும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் வாக்குப் பதிவு தொடங்கியது!

இன்று யாருக்கு யோகம்?

திருவள்ளூா் நகராட்சியில் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைப்பு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT