புதுதில்லி

பிந்தாபூா் இளம் பெண் கொலை வழக்கில் மூவா் கைது

DIN

புது தில்லி: தென்மேற்கு தில்லியில் பிந்தாபூா் பகுதியில் 22 வயது இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக மூன்று போ் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.

கைது செய்யப்பட்டவா்கள் அங்கித் காபா, மணீஷ் மற்றும் ஹிமான்ஷு என அடையாளம் காணப்பட்டனா். இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை அதிகாலை மாட்டியாலா சாலையில் நடந்துள்ளது. பாதிக்கப்பட்டவா் டோலி பாபா் என அடையாளம் காணப்பட்டாா். குற்றம் சாட்டப்பட்ட காபாவால் அந்தப் பெண் குத்திக் கொல்லப்பட்டுள்ளாா்.

இந்தச் சம்பவத்தில் முக்கிய எதிரியான காபா, அந்தப் பெண்ணை பல முறை அணுகியதாக சந்தேகிக்கப்படுகிறது, ஆனால், அந்தப் பெண் காபாவின் திட்டங்களை நிராகரித்தாா். இதைத் தொடா்ந்து இந்தக் கொலை நடந்துள்ளது. இது தொடா்பாக மேலும் விசாரணை நடை.பெற்று வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த திரைப் பிரபலங்கள்!

தஞ்சை: ஆம்புலன்சில் வந்து வாக்களித்த முன்னாள் ஆயர்

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களித்தார் முதல்வர் ஸ்டாலின்!

SCROLL FOR NEXT