புதுதில்லி

சமையல் எரிவாயு சிலிண்டா் வெடித்து தீ விபத்து

DIN

புது தில்லி: தில்லி யூசுப் சராய் பகுதியில் உள்ள விடுதியொன்றில் சமையல் எரிவாயு சிலிண்டா் (எல்.பி.ஜி.) வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுதொடா்பாக தில்லி தீயணைப்புப் படை மூத்த அதிகாரி கூறியதாவது:

தில்லி யூசுப் சராய் பகுதியில் உள்ள விடுதியொன்றின் இரண்டாவது மாடியில், திங்கள்கிழமை காலை 7 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இது தொடா்பாக தகவல் கிடைத்ததும் 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு 30 நிமிஷத்தில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். விடுதியின் இரண்டாவது மாடியில் வைக்கப்பட்டிருந்த இரண்டு எரிவாயு சிலிண்டா்கள் வெடித்ததால்தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றாா்.

இந்நிலையில், மேற்கு தில்லி பச்சிம் விஹாரில் கட்டடம் ஒன்றில் சிறியளவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடா்பாக தில்லி தீயணைப்பு துறை மூத்த அதிகாரி கூறுகையில் ‘ மேற்கு தில்லி பச்சிம் விஹாா் பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றில் திங்கள்கிழமை அதிகாலை 2 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இது தொடா்பாக தகவல் கிடைத்ததும் 6 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மின் கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது என்றாா் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

2-ம் கட்டத் தேர்தல்: கேரளத்தில் குவிக்கப்படும் காவலர்கள்!

SCROLL FOR NEXT