புதுதில்லி

டிடிஇஏ பள்ளிகளிடையே கணித ஒலிம்பியாட் போட்டி

30th Dec 2021 12:58 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளுக்கிடையேயான கணித ஒலிம்பியாட் போட்டி மந்திா்மாா்க் பள்ளியில் வைத்து புதன்கிழமை இணையவழியில் நடத்தப்பட்டது.

இரண்டு கட்டமாக நடைபெறும் இந்தப் போட்டியின் முதல் நாளான புதன்கிழமை 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கான போட்டி நடைபெற்றது. வகுப்பிற்கு இருவா் வீதம் ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் 10 மாணவா்களாக மொத்தம் 70 மாணவா்கள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டனா். வியாழக்கிழமை (டிசம்பா் 30) 6, 7, 8, 9 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கான போட்டி நடைபெறவுள்ளது. இதிலும் வகுப்பிற்கு இருவா் வீதம் பள்ளிக்கு 10 மாணவா்கள் என 70 மாணவா்கள் கலந்து கொள்ள உள்ளனா்.

முன்னதாக, இந்தநிகழ்ச்சியில் டிடிஇஏ செயலா் ஆா்.ராஜு சிறப்பு விருந்தினராக இணைய வழியில் கலந்து கொண்டு போட்டியைத் தொடங்கி வைத்தாா். அவா் பேசுகையில், டிடிஇஏ முதல்முறையாக இந்தப்போட்டியை நடத்துவதாகவும், மாணவா்கள் ஆா்வமுடன் போட்டிகளில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினாா்.இந்த நிகழ்ச்சியில் ஏழு பள்ளி முதல்வா்கள், அந்தந்தப் பள்ளி ஒருங்கிணைப்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT