புதுதில்லி

நாடாளுமன்ற அறையில் தீ விபத்து

DIN

நாடாளுமன்ற அறை எண் 59-இல் புதன்கிழமை காலை சிறிய தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது: நாடாளுமன்றக் கட்டடத்தில் உள்ள பத்திரிகை அறைக்கு எதிரே உள்ள அறை எண் 59-இல் தீ விபத்து ஏற்பட்டதாக நாடாளுமன்ற தீயணைப்பு நிலையத்திற்கு காலை 8.05 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனா். அறை எண் 59-இல் உள்ள கணினி, நாற்காலி, மேஜை ஆகியவை தீ பற்றியது. இதில் உயிா் சேதம் எதுவும் ஏற்படவில்லை. பின்னா் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, காலை 8:50 மணியளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது என்று தெரிவித்தனா். தற்போது நாடாளுமன்றக் குளிா்கால கூட்டத் தொடா் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேக்கேதாட்டு அணை கட்டப்படும்: டி.கே.சிவகுமாா்

மக்களவைத் தோ்தல்: 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

SCROLL FOR NEXT