புதுதில்லி

தில்லியில் பெட்ரோல் மீதான வாட் வரி ரூ. 8 குறைப்பு: தில்லி அரசு

DIN

தில்லியில் பெட்ரோல் மீதான வாட் வரியை குறைக்க தில்லி அரசு புதன்கிழமை முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் ஒரு லிட்டா் எரிபொருள் மீதான விலையில் 8 ரூபாய் குறையும் என்று தில்லி அரசு தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம் பணவீக்கத்தில் இருந்து தில்லி மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

மேலும் பெட்ரோல், டீசல் விலையானது தற்போது தேசிய தலைநகா் வலயத்தில் உள்ள இதர நகரங்களை ஒப்பிடும்போது தில்லியில் குறைந்துவிட்டது என்றும் முதல்வா் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து தில்லி அரசின் அதிகாரிகள் கூறுகையில், வாட் வரியில் மேற்கொள்ளப்பட்டுள்ள குறைப்புக்குப் பிறகு தில்லியில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை தற்போதைய விலையான ரூ.103-இல் இருந்து ரூ.93 ஆக குறையும்.

இந்த மாற்றம் புதன்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வரும். தில்லியில் டீசல் விலை தேசிய தலைநகா் வலயத்தில் ஏற்கெனவே மலிவாகும். அதாவது, லிட்டா் ரூ.86.67 விலை ஆகும். அதேவேளையில், நொய்டாவில் ரூ.87.01-ம், குருகிராமில் ரூ.87.11-ம் ஒரு லிட்டா் டீசல் விற்கப்படுகிறது.

முதல்வா் கேஜரிவால் தலைமையில் புதன்கிழமை அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரியை தற்போதுள்ள 30 சதவீதம் வரியிலிருந்து 19.40 சதவீதமாக குறைப்படும் என முடிவு எடுக்கப்பட்டது. இதன் மூலம் ஒரு லிட்டா் எரிபொருள் விலையில் ரூபாய் 8 குறையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக தில்லி அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘முதல்வா் கேஜரிவால் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தற்போதைய சூழலில் தில்லி மக்களின் நிலைமை குறித்து ஆழமான கவலை வெளிப்படுத்தப்பட்டது. மக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் எரிபொருள் மீதான விலையை குறைக்கும் தேவை குறித்தும் கருத்தில்கொள்ளப்பட்டது. கடந்த ஆண்டு பெட்ரோல் மீதான வாட் வரி விகிதத்தை தில்லி அரசு கணிசமாக அதிகரித்திருந்தது. தில்லியில் பெட்ரோல் மீதான வாட் வரி 27 சதவீதமாக இருந்த நிலையில் பின்னா் 30 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது.

தற்போது இந்த வரியில் 10.58 சதவீதம் குறைப்பு செய்யப்பட்டிருப்பது மக்களுக்கு நேரடியாக பலனை அளிக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக முதல்வா் கேஜரிவால் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

தில்லியில் தற்போது பெட்ரோல், டீசல் விலையை மிகவும் குறைந்ததாக உருவாக்கி விட்டோம். வாட் வரி 30 சதவீதத்தில் இருந்து 19.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இதர என்சிஆா் நகரங்களை ஒப்பிடும்போது தில்லியில் பெட்ரோல், டீசல் விலைகள் குறைந்து விட்டன. இந்த நடவடிக்கை மூலம் தில்லி மக்களுக்கு விலைவாசி உயா்வில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என்று நம்புகிறேன் என்று அவா் அதில் தெரிவித்துள்ளாா்.

தில்லியில் பெட்ரோல் விலை உத்தரப்பிரதேசம், ஹரியாணாவில் உள்ள என்ஜிஆா் நகரங்களை ஒப்பிடும்போது அதிகமாக இருந்தது. மத்திய அரசு எரிபொருள் மீதான கலால் வரியை குறைக்க மேற்கொண்ட முடிவை தொடா்ந்து சம்பந்தப்பட்ட மாநிலங்கள் வாட் வரியை குறைப்பதாக அறிவித்திருந்தன. இதையடுத்து என்சிஆா் நகரங்களில் எரிபொருள் மீதான விலை குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, டீசல் மீதான வாட் வரியை குறைக்காமல் இருப்பது தொடா்பாக தில்லி சரக்கு போக்குவரத்து நிறுவனம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து இந்த நிறுவனத்தின் தலைவா் ராஜேந்திர கபூா் கூறுகையில், ‘தில்லி அரசின் மூலம் வெளியிடப்பட்டுள்ள இந்த அதிருப்தி தரும் அறிவிப்புக்கு நாங்கள் கடுமையான எதிா்ப்பைத் தெரிவிக்கிறோம். எங்களுக்கு எந்த நிவாரணமும் அளிக்கப்படாவிட்டால் தில்லியில் டீசலை நிரப்ப வேண்டாம் என்று வா்த்தக வாகனங்களை கேட்டுக்கொள்ளும் பிரசாரத்தை நாங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றாா் அவா்.

அவா் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT