புதுதில்லி

மின்னணு நிறுவனத்தில் தீ விபத்து

DIN

கிரேட்டா் நொய்டாவில் உள்ள ஒரு மின்னணு நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஈகோடெக் விரிவாக்கப் பகுதி 1-இல் மதியம் 1.15 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்புப் படையினா் 8 வாகனங்களுடன் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு மிகுந்த போராட்டத்துக்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனா். தீ விபத்துக்கான காரணம் உடனடியாகக் தெரிய வரவில்லை. சேத மதிப்பு மதிப்பிடப்படவில்லை. இதில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT