தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் 4 கிலோ கஞ்சா போதைப் பொருள் வைத்திருந்ததாக இருவரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசாா் கைது செய்தனா்.
இதுகுறித்து நொய்டா போலீஸாா் சனிக்கிழமை கூறியதாவது:
வெள்ளிக்கிழமை இரவு பஞ்ச்ஷீல் சுரங்க நடைபாதை அருகே எக்ஸ்பிரஸ்வே காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, போதைப் பொருள் வைத்திருந்த இருவரை கைது செய்தனா். விசாரணையில் அவா்கள் இருவரும் உத்தர பிரதேச மாநிலம், ஃபதேபூா் மாவட்டத்தைச் சோ்ந்த சாகா் குமாா், பிகாா் மாநிலம், சஹா்சா மாவட்டத்தைச் சோ்ந்த ஆனந்த்குமாா் ஆகியோா் என அடையாளம் காணப்பட்டனா். அவா்களிடமிருந்து நான்கு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அவா்கள் இருவா் மீதும் போதை மருந்து தடுப்புச் சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, இருவரும் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.