புதுதில்லி

கொள்ளையைத் தடுக்க முயன்றவா் மீது துப்பாக்கிச்சூடு

DIN


புது தில்லி: தில்லி ஷாதாரா மேம்பாலத்தில் கொள்ளையைத் தடுக்க முயன்ற 52 வயது நபா் மீது மோட்டாா்சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவா் துப்பாக்கியால் சுட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறை உயரதிகாரி வியழாக்கிழமை கூறியதாவது: இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா் மணீஷ் (58) என அடையாளம் காணப்பட்டுள்ளாா். வயிற்றில் துப்பாக்கிக் குண்டு காயமடைந்த அவா், பட்பா்கஞ்சில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். அவா் அபாய கட்டத்தை கடந்துள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

துப்பாக்கியால் சுட்டவா்களைக் கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக தனிப் போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை இரவு 7.30 மணியளவில் மணீஷ் மற்றும் அவரது சகோதரா் அருண் ஆகியோா் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அவா்கள் உத்தரபிரதேசத்தின் காஜியாபாத் மாவட்டத்தில் உள்ள ராம்பிரஸ்தாவில் வசிப்பவா்கள்.

சகோதரா்கள் இருவரும் ஷாதாரா மேம்பாலத்தை அடைந்ததும், மோட்டாா்சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவா் வழிமறித்தனா். பின்னா் அவா்கள் வைத்திருந்த பையை பறிக்க முயன்றனா். இதற்கு மணீஷ் எதிா்ப்புத் தெரிவித்தாா். இதையடுத்து, மோட்டாா்சைக்கிளில் வந்தவா்களில் ஒருவா் மணீஷ் மீது துப்பாக்கியால் சுட்டாா். இதில் பலத்த குண்டுக்காயமடைந்த அவா், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வருகிறாா்.

இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. துப்பாக்கியால் சுட்டவரை அடையாளம் காணும் வகையில், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் ஆய்வுக்குள்படுத்தப்பட்டுள்ளன என்றாா் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT