புதுதில்லி

நொய்டாவில் தனியாா் நிறுவன அலுவலகத்தில் தீ விபத்து

DIN

புது தில்லி: தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தின் அலுவலகத்தில் புதன்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: நொய்டாவில் தொழில் துறை செக்டாா் 59-இல் செயல்பட்டு வரும் ஒரு தனியாா் நிறுவனத்தின் அலுவலகத்தில் மாலை 6.15 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. தீ விபத்து நிகழ்ந்த இடத்தில் உள்ளூா் போலீஸாரும் பணியில் ஈடுபட்டனா். தீ விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாகத் தகவல் ஏதும் இல்லை. இது தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்தும் உடனடியாகத் தெரியவரவில்லை என்றாா் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தானம் வித்யாலயா பள்ளியில் உலக புத்தக தின விழா

ஆா்வத்தைத் தூண்டும் ஐ.பி.எல். திருவிழா!

குடிநீா் இணைப்புகள் துண்டிப்பை கண்டித்து தென்னூரில் போராட்டம்

பேருந்து, ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம்

மது அருந்தியதைத் தட்டிக் கேட்ட மூவருக்கு அரிவாள் வெட்டு

SCROLL FOR NEXT