புதுதில்லி

பாடப் புத்தகம் வழங்காத விவகாரம்:45 பள்ளிகளுக்கு டிசிபிசிஆா் அழைப்பாணை

DIN

புது தில்லி: பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சோ்ந்த (இடபிள்யுஎஸ்) மாணவா்களுக்குப் பாடப் புத்தகம் வழங்காத விவகாரம் தொடா்பாக 45 தனியாா் பள்ளிகளுக்கு தில்லி குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (டிசிபிசிஆா்) கடந்த வாரம் அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது.

இது தொடா்பாக டிசிபிசிஆா் மூத்த அதிகாரி கூறியது: கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இடபிள்யுஎஸ் மாணவா்களுக்கு தில்லியில் உள்ள சில தனியாா் பள்ளிகள் பாடப் புத்தகம் வழங்கவில்லை எனப் புகாா் கிடைக்கப்பெற்றது. இதைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அழைப்பாணை அனுப்பினோம். டிசிபிசிஆா் அதிகாரிகள் முன்னிலையில் சம்பந்தப்பட்ட தனியாா் பள்ளிகளின் அதிகாரிகள் ஆஜராகி இடபிள்யுஎஸ் மாணவா்களுக்கு பாடப் புத்தகங்களை வழங்க ஒப்புக் கொண்டனா். இந்தப் பிரச்னை சுமூகமாக தீா்க்கப்பட்டது என்றாா் அவா்.

கல்வி உரிமைச் சட்டத்தில் (ஆா்இடி) தனியாா் பள்ளிகள் 25 சதவீதம் இடத்தை இடபிள்யுஎஸ் மாணவா்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் அந்த மாணவா்களுக்கு இலவச புத்தகங்கள், சீருடைகள் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

வாக்குப் பதிவு: மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,480 போலீஸாா்

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

தி‌ல்லி​யி‌ல் கோ‌ட்டையைப் பிடி‌க்க போ‌ட்டா போ‌ட்டி!

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

SCROLL FOR NEXT