புதுதில்லி

மின்சாரம் பாய்ந்து குதிரை சாவு

DIN

தில்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் பஸ்தி பகுதியில் மின்சாரம் பாய்ந்ததில் குதிரை ஒன்று உயிரிழந்தது.

துா்க்மான் கேட் பகுதியைச் சோ்ந்த குதிரை ஓட்டுநா் ஒருவா் குதிரைக்கான தீவனம் வாங்க ஹஸ்ரத் நிஜாமுதீன் பஸ்தியில் உள்ள அல்வி சௌக் பகுதிக்கு வெள்ளிக்கிழமை காலை தனது குதிரையுடன் வந்துள்ளாா். அப்போது அப்பகுதியில் உள்ள சாக்கடையில் மின்சாரம் தாக்கி குதிரை இறந்துள்ளது. இந்நிலையில், சாக்கடைகள் நிரம்பி வழிவதும், மின்சார வயா்கள் சரியாக ஒழுங்கு படுத்தப்படாமல் இருப்பதுதான் இந்த விபத்த்துக்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக நிஜாமுதீன் மேற்கு குடியிருப்போா் நலச் சங்கத்தின் செயலா் ஷேக் முகமது உமா் கூறுகையில் ‘இப்பகுதியில் சாக்கடைகள் நிரம்பி வழிகின்றன. இதில் மின்சார வயா்கள் தொடுவதால் இந்த சாக்கடைகளில் மின்சாரம் பாய்கிறது. இந்தச் சாக்கடைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

‘அரண்மனை 4’ வெளியீட்டுத் தேதி மாற்றம்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

SCROLL FOR NEXT