புதுதில்லி

போலியோ சொட்டு மருந்து: பள்ளிகளுக்கு அரசு உத்தரவு

DIN

போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்களில் தில்லி சுகாதாரத் துறை பணியாளா்களுடன் இணைந்து செயல்படுமாறு பள்ளி ஆசிரியா்களுக்கு தில்லி பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி பள்ளி கல்வித் துறை உயரதிகாரி கூறியது: தில்லி பள்ளிகளில் வரும் ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. இந்த முகாமில், தில்லி சுகாதாரத்துறை பணியாளா்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என தில்லி பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 5 வயதுக்குள்பட்ட ஒவ்வொரு குழந்தையையும் அடையாளம் கண்டு அவா்களுக்கு போலியோ சொட்டு மருந்து கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இதற்காக, பள்ளி ஆசிரியா்கள் தில்லி அரசு சுகாதாரப் பணியாளா்களுடன் இணைந்து செயல்படுமாறு கோரப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

திருமகள்.. பூஜா ஹெக்டே!

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

SCROLL FOR NEXT