தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள காஜியாபாத், குருகிராம், நொய்டா ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவில் இருந்தது என்று மத்திய அரசு நிறுவனம் தெரிவித்தது.
இது தொடா்பாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீட்டு நிலவரப்படி, தில்லியின் ஐந்து அருகாமை நகரங்களில் பி.எம். 2.5, பி.எம். 10 மாசு நுண்துகள் அளவு மிகவும் அதிகளவில் உள்ளது. 24 மணி நேர சராசரி அளவாக கிரேட்டா் நொய்டா, காஜியாபாத், நொய்டா, குருகிராம், ஃபரீதாபாத் உள்ளிட்ட நகரங்கள் முறையே ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு 394, 382, 379, 367, 337 என்ற அளவில் இருந்தது.