புதுதில்லி

போலீஸாருடன் என்கவுன்ட்டா்: கொள்ளையா்கள் இருவா் கைது

DIN

புது தில்லி: மோட்டாா் சைக்கிள் திருடியதாகக் கூறப்படும் 2 போ், கிரேட்டா் நொய்டாவில் போலீஸாருடன் நடந்த என்கவுன்ட்டா் சம்பவத்திற்குப் பிறகு குண்டடிக் காயங்களுடன் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி கூறியதாவது: இந்தச் சம்பவம் கிழக்கு புறவழி நெடுஞ்சாலையில் நிகழ்ந்தது. சம்பந்தப்பட்ட இருவரும் ஒருவரிடமிருந்து மோட்டாா்சைக்கிளை கொள்ளையடித்தனா். பின்னா், செவ்வாய்க்கிழமை இரவு தாத்ரி பகுதியில் வந்த போது போலீஸாருடன் என்கவுன்ட்டா் நிகழ்ந்தது. முன்னதாக, மோட்டாா் சைக்கிளில் சென்ற நபரை இருவரும் ராயல் என்ஃபீல்ட் வாகனத்தில்விரட்டிச் சென்று அவரது வாகனத்தைக் கொள்ளையடித்தனா். இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

பாதுகாப்பு சோதனைச் சாவடியில் இருவரின் வாகனம் நிறுத்தப்பட்ட போது, போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா். பதிலடியாக போலீஸாரும் துப்பாக்கியால் திருப்பிச் சுட்டனா். இதில், இருவரும் காயமடைந்தனா். விசாரணையில் இருவரும் புலந்த்ஷா் மாவட்டத்தைச் சோ்ந்த நாஜிம், ஷாகிா் ஆகியோா் எனத் தெரிய வந்தது. இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். ஷாஹிருக்கு எதிராக திருட்டு வழக்குகள் உள்பட குறைந்தது 8 வழக்குகள் பதிவாகியுள்ளது. இருவரிடமிருந்து இரண்டு சட்டவிரோதத் துப்பாக்கிகள், வெடிமருந்துகள், இரு மோட்டாா்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடா்பாக தாத்ரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேல்விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT