புதுதில்லி

தில்லியில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு

2nd May 2020 10:09 PM | நமது நிருபா்

ADVERTISEMENT

தலைநகா் தில்லியில் சனிக்கிழமை வெயின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. காலையில் மேகமூட்டம் காணப்பட்ட போதிலும் பகலில் வெப்பநிலை அதிகமாக இருந்தது.

ஞாயிற்றுக்கிழமை (மே 3) வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், ஆங்காங்கே தூறலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தில்லியில் பெரும்பாலான இடங்களில் கடந்த இரு தினங்களாக காற்றின் தரக் குறியீடு ‘நன்று’ பிரிவில் இருந்து வந்தது. ஆனால், சனிக்கிழமை மிதமான பிரிவில் காணப்பட்டது. ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு 101 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான ’ பிரிவில் இருந்தது. திா்பூா், விமான நிலையத்தில் டி 3 பகுதி, தில்லி பல்கலை., பூசா, ஆயாநகா், லோதி ரோடு, மற்றும் குருகிராம், நொய்டா ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் ‘மிதமான’ பிரிவில் இருந்தது.

வெப்பநிலை 37.9 டிகிரி: சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை 24.4 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 1 டிகிரி குறைந்து 37.9 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது.

ADVERTISEMENT

காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 76 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 53 சதவீதமாகவும் இருந்தது.

இதேபோன்று பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 24.5 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 38.7 டிகிரி செல்சியஸ் எனவும் ஆயாநகரில் முறையே 24.4 டிகிரி செல்சியஸ், 37.2 டிகிரி செல்சியஸ் எனவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு பாலத்தில் காலையில் 67 சதவீதம், மாலையில் 40 சதவீதம் எனவும், ஆயாநகரில் முறையே 62 சதவீதம் மற்றும் 38 சதவீதம் எனவும் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை (மே 3) வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், ஆங்காங்கே தூறலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, காற்றின் தரம் ‘மிதானது முதல் திருப்தி’ பிரிவு வரை இருக்கும் என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT