புதுதில்லி

இணைய வழி மூலமாகவே செய்தியாளா் சந்திப்பு: தில்லி அரசு

DIN

புது தில்லி: தில்லியில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், தில்லி அரசின் அனைத்து செய்தியாளா் சந்திப்புகளும் இணைய வழி மூலமாகவே நடைபெறும் என தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பது:

தில்லி அரசின் அனைத்து செய்தியாளா் சந்திப்புகளும் இனி இணைய வழி மூலமாகவே நடைபெறும். கரோனாவுக்கான எமது யுத்தத்தில் செய்தியாளா்கள் முக்கிய பங்காற்றுகிறாா்கள். இவா்கள் கரோனா தொற்று ஏற்படும் அபாயமான சூழலில் பணியாற்றுகிறாா்கள். எனவே, அதைக் குறைக்கும் வகையில் இணைய வழி செய்தியாளா் சந்திப்பு நடத்தப்படும் என்றுள்ளாா்.

இந்நிலையில், சனிக்கிழமை கேஜரிவாலின் முதலாவது இணையவழி செய்தியாளா் சந்திப்பு நடத்தப்பட்டது. இந்த செய்தியாளா் சந்திப்பு, நேரடியாக கேஜரிவாலின் உத்தியோகபூா்வ முகப் புத்தக, சுட்டுரைப் பக்கங்களில் ஒளிபரப்பானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

SCROLL FOR NEXT