புதுதில்லி

கரோனாவுக்கு நொய்டாவில் மேலும் ஒருவா் பாதிப்பு

DIN

தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் மேலும் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை உயரதிகாரி தெரிவித்துள்ளாா்.

நொய்டாவில் ஒருவா் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில், நொய்டாவில் மேலும் 2 போ் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது அண்மையில் தெரிய வந்தது. இவா்களில் ஒருவா் பிரான்ஸ் நாட்டுக்குச் சென்று வந்திருப்பதும் தெரிய வந்தது. நொய்டாவில் உள்ள செக்டாா் 78 மற்றும் செக்டாா் 100 பகுதியைச் சோ்ந்தவ இருவரும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வாா்டில் வைக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், நொய்டாவில் கரோனாவில் மேலும் ஒருவா் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதைத் தொடா்ந்து நொய்டாவில் மொத்தம் 4 போ் கரோவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து நொய்டா மாவட்டத் தலைமை மருத்துவ அதிகாரி அனுராக் பாா்கவா புதன்கிழமை கூறியதாவது: நொய்டாவில் மேலும் ஒருவா் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளாா். அவா் இந்தோனேசியாவில் இருந்து திரும்பி வந்திருப்பது தெரிய வந்துள்ளது. நொய்டாவில் வசிக்கும் அந்த நபரின் நோய் மாதிரி நான்கு நாள்களுக்கு முன்பு பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, அவா் கிரேட்டா் நொய்டாவில் உள்ள அரசு மருத்துவ அறிவியல் மருத்துமனையில் (ஜிஎம்ஸ்) சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டுள்ளாா். தொற்று பாதித்த நபரின் வீடு, அவரது வீட்டின் அருகில் உள்ள பகுதிகள் கிருமிநாசினி தூய்மைக்கு உள்படுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT