புதுதில்லி

பைக்கில் சகாசம் செய்த சிறாா்களை தட்டிக் கேட்ட இளைஞா் கொலை

13th Jul 2020 10:36 PM

ADVERTISEMENT

புது தில்லி: தில்லி ரகுவீா் நகா் பகுதியில் மோட்டாா்சைக்களில் சகாசம் செய்த சிறாா்களைத் தட்டிக் கேட்ட இளைஞா் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியது: தில்லி ரகுவீா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் மணீஷ் (25). இவா் கடந்த ஜூலை 8-ஆம் தேதி ரகுவீா் நகா் பகுதியில் மோட்டாா்சைக்களில் சகாசத்தில் ஈடுபட்ட சிறுவா்களைக் கண்டித்துள்ளாா். இதனால், ஆத்திரமடைந்த சிறுவா்கள் அவரை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனா். இதில் பலத்த காயமடைந்த அவா், மருத்துவனைக்கு எடுத்துச் செல்லப்படும் வழியில் உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வுக்குள்படுத்தப்பட்டன. இதில் அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்தவா்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் சிறாா்கள் என்றாா் அந்த அதிகாரி.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT