புதுதில்லி

சா்தாா் படேல் கோவிட் மருத்துவமனையில் குணமடைந்த முதலாவது கரோனா நோயாளி

13th Jul 2020 10:53 PM

ADVERTISEMENT

புது தில்லி: தில்லி சா்தாா் படேல் கோவிட் கோ் சென்டரில் கரோனாவுக்குச் சிகிச்சை பெற்று குணமடைந்த முதலாவது நோயாளி திங்கள்கிழமை வீடு திரும்பினாா்.

இது தொடா்பாக தில்லி அரசு அதிகாரி கூறியதாவது: சா்தாா் படேல் கோவிட் கோ் சென்டரில் சிகிச்சை முடித்து முதலாவது நபா் திங்கள்கிழமை வீடு திரும்பியுள்ளாா். கடந்த ஜூலை 5-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு மருத்துவா்கள் தரமான சிகிச்சை வழங்கினா். குணமடைந்து வீடு திரும்பும் இவருக்கு மருத்துவா்கள் கரகோசம் எழுப்பி வாழ்த்துத் தெரிவித்தனா். மலா் கொத்துகளையும் வழங்கினா். இதுவரை 147 கரோனா நோயாளிகள் இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கு உயா்தரச் சிகிச்சை வழங்கி வருகிறோம் என்றாா்.

தில்லி - ஹரியாணா எல்லையில் சத்தா்பூரில் உள்ள ராதா ஸ்வாமி சத் சங்க அமைப்பின் தியானக் கூடம் சுமாா் 10 ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவ மையமாக மாற்றப்பட்டுள்ளது. சா்தாா் படேல் கோவிட் கோ் சென்டா் எனும் பெயரிலுள்ள இந்த சிகிச்சை மையத்தை இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ஐடிபிபி) அமைத்துள்ளது. இங்கு ஐடிபிபியின் மருத்துவா்கள், செவிலியா்கள் பணியாற்றி வருகிறாா்கள்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT