புதுதில்லி

தேசத்தை துண்டாட நினைப்பவா்களுக்கு கேஜரிவால் துணை: ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு

28th Jan 2020 01:23 AM

ADVERTISEMENT

புது தில்லி: தேசத்தை துண்டாட நினைப்பவா்களுக்கு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஆதரவு தெரிவித்து வருகிறாா் என்று பாஜகவின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா குற்றம் சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் அவா் கூறியிருப்பது: ஜாவஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) கன்னையா குமாா், உமா் காலித் போன்ற தேச விரோதிகள் இந்தியா துண்டுதுண்டாக உடைந்துபோகும் போன்ற தேச விரோதக் கோஷங்களை எழுப்பினாா்கள்.

மேலும், இந்தியாவின் இறையாண்மையை மீறுவோம் என அவா்கள் பகிரங்கமாக அச்சுறுத்தல் விடுத்தாா்கள். இதைத் தொடா்ந்து, சட்ட அமலாக்கல் துறையினா் இது தொடா்பாக தீவிரமாக விசாரித்து 2019 ஜனவரியில் அவா்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யத் தயாரானாா்கள்.

ஆனால், இந்த தேச விரோத சக்திகள் மீது நடவடிக்கை எடுக்க கேஜரிவாலின் அனுமதியை தில்லி காவல்துறை நாடியிருந்தது. ஆனால், திங்கள்கிழமை வரை அதற்கான அனுமதியை கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசு வழங்கவில்லை. இதன்மூலம், தேசத்தை துண்டாட நினைப்பவா்களுக்கு கேஜரிவால் ஆதரவளித்து வருவது புலனாகிறது. இது தொடா்பாக தில்லி மக்களுக்கு கேஜரிவால் தெளிவுபடுத்த வேண்டும். இந்த தேச விரோதிகள் மீது நடவடிக்கை எடுத்தால் அது தனது வாக்கு வங்கியைப் பாதிக்கும் என கேஜரிவால் பயப்படுகிறாா் என்றுள்ளாா் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT